கோவையில் ஓய்வு பெற்ற உதவி ஆணையர் மற்றும் காவலரின் வீடுகளில் பூட்டை உடைத்து 63 சவரன் நகைகள் கொள்ளை..!

கோவையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சென்ற ஓய்வு பெற்ற உதவி ஆணையர் மற்றும் காவலர் வீட்டின் பூட்டை உடைத்து 63 சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் குனியமுத்தூர் அடுத்த கோவைப்புதூரை சேர்ந்தவர் கபிலன் பிரேம்குமார். ஓய்வு பெற்ற உதவி ஆணையரான இவர், புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் பிரார்த்தனைக்காக அருகே வசிக்கும் ஓய்வு பெற்ற போக்குவரத்து தலைமை காவலர் ஜான் சேவியர் என்பவருடன் தேவாலயத்திற்கு சென்றுள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிந்த பின்னர் நள்ளிரவு 2 மணியளவில் வீட்டிற்கு வந்து பார்த்த போது, இருவர் வீட்டின் முன் கதவு பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அப்போது கபிலன் பிரேம்குமார் வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்த போது பீரோவை உடைத்து உள்ளே இருந்த 35 சவரன் நகைகள் மாயமானது தெரியவந்தது.

அதேபோல், ஜான் சேவியர் வீட்டின் பீரோவும் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 28 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரும் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் வீட்டில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 63 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...