கோவையில் ஓய்வு பெற்ற உதவி ஆணையர் மற்றும் காவலரின் வீடுகளில் பூட்டை உடைத்து 63 சவரன் நகைகள் கொள்ளை..!

கோவையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சென்ற ஓய்வு பெற்ற உதவி ஆணையர் மற்றும் காவலர் வீட்டின் பூட்டை உடைத்து 63 சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் குனியமுத்தூர் அடுத்த கோவைப்புதூரை சேர்ந்தவர் கபிலன் பிரேம்குமார். ஓய்வு பெற்ற உதவி ஆணையரான இவர், புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் பிரார்த்தனைக்காக அருகே வசிக்கும் ஓய்வு பெற்ற போக்குவரத்து தலைமை காவலர் ஜான் சேவியர் என்பவருடன் தேவாலயத்திற்கு சென்றுள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிந்த பின்னர் நள்ளிரவு 2 மணியளவில் வீட்டிற்கு வந்து பார்த்த போது, இருவர் வீட்டின் முன் கதவு பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அப்போது கபிலன் பிரேம்குமார் வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்த போது பீரோவை உடைத்து உள்ளே இருந்த 35 சவரன் நகைகள் மாயமானது தெரியவந்தது.

அதேபோல், ஜான் சேவியர் வீட்டின் பீரோவும் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 28 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரும் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் வீட்டில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 63 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...