கோவை அரசு மருத்துவமனையில் புத்தாண்டு பிறந்த இந்நாளில் 20 குழந்தைகள் பிறந்துள்ளன

கோவை அரசு மருத்துவமனையில் இன்று 20 கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பார்க்கப்பட்டு, 20 குழந்தைகள் பிறந்துள்ள நிலையில், புத்தாண்டு நாளில் இரட்டிப்பு மகிழ்ச்சியாக குழந்தைகள் வந்துள்ளதாக குடும்பத்தார் தகவல்.



கோவை: கோவை அரசு மருத்துவமனையில் புத்தாண்டு பிறந்த இந்த நாளில் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள் 20 பேருக்கு இன்று பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது.

இதில் 10 பெண்களுக்கு சுகப்பிரசவம் 10 பெண்களுக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டு 20 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் பத்து குழந்தைகள் ஆண் குழந்தைகள், 10 குழந்தைகள் பெண் குழந்தைகள்.

அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் இன்று ஒரே நாளில் இதுவரை 20 குழந்தைகள் பிறந்திருப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புத்தாண்டு என்றாலே கொண்டாட்டம் தான். இந்த நிலையில் புத்தாண்டில் குழந்தைகள் பிறந்திருப்பது அவர்களின் குடும்பத்தாருக்கு இந்த புத்தாண்டில் இரட்டிப்பு கொண்டாட்டம் என்றால் மிகையல்ல.

ஒவ்வொரு புத்தாண்டின் போதும், வருடத்தின் முதல் நாளில், பிறந்த நாள் கொண்டாடும் தருணத்தை பெற்ற இந்த குழந்தைகள், தங்களது வாழ்நாளில் மறக்க முடியாத நினைவுகளை பொக்கிஷமாக வைக்கின்ற அளவுக்கு புத்தாண்டு கொண்டாட்டத்தோடு பிறந்த நாள் கொண்டாட்டத்தையும் அரங்கேற்றி அகம் மகிழ்வர்.

அப்படி ஒரு ஆனந்தத்தை தரக்கூடிய நிகழ்வு இன்றைய தினம் அரங்கேறி இருக்கிறது. இன்று ஒரே நாளில் 20 கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பார்க்கப்பட்ட நிலையில் தாய், சேய் அனைவரும் நலமுடன் இருப்பதாகவும், மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...