கோவை மேட்டுப்பாளையம் அருகே 12 வயது சிறுமியை வன்கொடுமை செய்து போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் மீது ஆட்சியர் சமீரன் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த கெம்மாரம்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் குமார் (42). இவர் 12 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக காரமடை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இந்த நிலையில் வழக்கின் விசாரணை நடந்த நிலையில், கைதான நபர் பாலியல் குற்றவாளி என போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மாவட்ட ஆட்சியர் சமீரனுக்கு பரிந்துரை செய்தார்.
அதன் அடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், போக்சோ வழக்கில் கைதான ரமேஷ் குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவின் படி போக்சோ வழக்கு குற்றவாளியான ரமேஷ் குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
குண்டர் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டால் கைதான நபர் ஒரு வருடத்துக்கு ஜாமீனில் வெளிவர முடியாது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
இதுவரை கோவை மாவட்டத்தில் போக்சோ வழக்கு குற்றவாளி 5 நபர்கள் உட்பட 38 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்திலும், 2 நபர்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் வழக்கின் விசாரணை நடந்த நிலையில், கைதான நபர் பாலியல் குற்றவாளி என போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மாவட்ட ஆட்சியர் சமீரனுக்கு பரிந்துரை செய்தார்.
அதன் அடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், போக்சோ வழக்கில் கைதான ரமேஷ் குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவின் படி போக்சோ வழக்கு குற்றவாளியான ரமேஷ் குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
குண்டர் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டால் கைதான நபர் ஒரு வருடத்துக்கு ஜாமீனில் வெளிவர முடியாது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
இதுவரை கோவை மாவட்டத்தில் போக்சோ வழக்கு குற்றவாளி 5 நபர்கள் உட்பட 38 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்திலும், 2 நபர்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.