கோவையில் போக்சோ குற்றவாளி மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம் - ஆட்சியர் உத்தரவின் பேரில் நடவடிக்கை

கோவை மேட்டுப்பாளையம் அருகே 12 வயது சிறுமியை வன்கொடுமை செய்து போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் மீது ஆட்சியர் சமீரன் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த கெம்மாரம்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் குமார் (42). இவர் 12 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக காரமடை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இந்த நிலையில் வழக்கின் விசாரணை நடந்த நிலையில், கைதான நபர் பாலியல் குற்றவாளி என போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மாவட்ட ஆட்சியர் சமீரனுக்கு பரிந்துரை செய்தார்.

அதன் அடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், போக்சோ வழக்கில் கைதான ரமேஷ் குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவின் படி போக்சோ வழக்கு குற்றவாளியான ரமேஷ் குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

குண்டர் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டால் கைதான நபர் ஒரு வருடத்துக்கு ஜாமீனில் வெளிவர முடியாது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

இதுவரை கோவை மாவட்டத்தில் போக்சோ வழக்கு குற்றவாளி 5 நபர்கள் உட்பட 38 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்திலும், 2 நபர்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...