விபத்தில் சிக்கிய தாய் - மகள்: கோவை தனியார் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த தாயின் உறுப்புகள் தானம்

சத்தியமங்கலம் அருகே ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்ற தாய் - மகள் விபத்துக்குள்ளானதில், சிகிச்சை பலனின்றி தாய் மூளைச்சாவு அடைந்தார். அவரது, கண், இருதயம், கல்லீரல், தண்டு வடம் ஆகிய உறுப்புகள் தானமாக பெறப்பட்டது.


கோவை: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரது மனைவி வித்யா. இவர் அதே பகுதியில் டெய்லர் கடை நடத்தி வந்துள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ள நிலையில், சம்பவத்தன்று வித்யா தனது மூத்த மகளுடன் மொபட்டில் சத்தியமங்கலம் ஆர்.டி.ஓ அலுவலகம் அருகே சென்ற போது பின்னால் வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து வித்யா சென்ற மொபட் மீது மோதியது.

இதில், தூக்கி வீசப்பட்டு இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இருவரும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. விபத்தில், வித்யாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், அவர் தீவிர அவசர பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த சூழலில், நேற்று அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இது குறித்து, மருத்துவமனை நிர்வாகம் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்த போது அவரது மகள்கள் மற்றும் பெற்றோர் வித்யாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்துள்ளனர்.

இதையடுத்து, மருத்துவர்கள் உடல் உறுப்புகளை தானம் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, கண், நுரையீரல், இருதயம், சிறுநீரகம், தண்டுவடம் ஆகியவற்றை தானமாக பெற்றனர். தொடர்ந்து, ஏற்கனவே நோயாளிகளின் தேவைகளை ஆராய்ந்து அவற்றை சென்னை மற்றும் கோவையில் உள்ள மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டனர்.

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற நிலையில், விபத்தில் சிக்கி தாய் - மகள் ஆகியோர் படு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அதில் தாய் வித்யா தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தாக, மருத்துவர்கள் தெரிவித்தனர்.

உறுப்பு தானம் செய்ய அவரது குடும்பத்தார் முன்வந்ததால், அவரது தண்டுவடம் கோவை கங்கா மருத்துவமனைக்கும், கண் கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கும், சிறுநீரகம் தங்கள் மருத்துவமனையிலேயே சிகிச்சையில் உள்ள நோயாளி ஒருவருக்கும், நுரையீரல், இருதயம், கல்லீரல் ஆகியவை சென்னையிலுள்ள மருத்துவமனைகளுக்கும் பாதுகாப்பாக அனுப்பப்பட்டதாக தெரிவித்த மருத்துவர்கள், தாய் மகள் என இருவருக்கும் சிகிச்சை கட்டணம் இலவசமாக்கப்பட்டுள்ளதாகவும், கூறினர்.

அதேபோல், தங்கள் மகள் உயிரிழந்த நிலையில் அவரது உறுப்புகள் ஆறு பேரின் உயிரை காப்பாற்றியுள்ளது மகிழ்ச்சி எனவும் ஏற்கனவே தந்தை இல்லாமல் தற்போது தாயையும் இழந்துள்ள இரண்டு பெண்களுக்கும் அரசு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என வித்யாவின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...