விபத்தில் சிக்கிய தாய் - மகள்: கோவை தனியார் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த தாயின் உறுப்புகள் தானம்

சத்தியமங்கலம் அருகே ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்ற தாய் - மகள் விபத்துக்குள்ளானதில், சிகிச்சை பலனின்றி தாய் மூளைச்சாவு அடைந்தார். அவரது, கண், இருதயம், கல்லீரல், தண்டு வடம் ஆகிய உறுப்புகள் தானமாக பெறப்பட்டது.


கோவை: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரது மனைவி வித்யா. இவர் அதே பகுதியில் டெய்லர் கடை நடத்தி வந்துள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ள நிலையில், சம்பவத்தன்று வித்யா தனது மூத்த மகளுடன் மொபட்டில் சத்தியமங்கலம் ஆர்.டி.ஓ அலுவலகம் அருகே சென்ற போது பின்னால் வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து வித்யா சென்ற மொபட் மீது மோதியது.

இதில், தூக்கி வீசப்பட்டு இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இருவரும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. விபத்தில், வித்யாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், அவர் தீவிர அவசர பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த சூழலில், நேற்று அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இது குறித்து, மருத்துவமனை நிர்வாகம் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்த போது அவரது மகள்கள் மற்றும் பெற்றோர் வித்யாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்துள்ளனர்.

இதையடுத்து, மருத்துவர்கள் உடல் உறுப்புகளை தானம் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, கண், நுரையீரல், இருதயம், சிறுநீரகம், தண்டுவடம் ஆகியவற்றை தானமாக பெற்றனர். தொடர்ந்து, ஏற்கனவே நோயாளிகளின் தேவைகளை ஆராய்ந்து அவற்றை சென்னை மற்றும் கோவையில் உள்ள மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டனர்.

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற நிலையில், விபத்தில் சிக்கி தாய் - மகள் ஆகியோர் படு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அதில் தாய் வித்யா தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தாக, மருத்துவர்கள் தெரிவித்தனர்.

உறுப்பு தானம் செய்ய அவரது குடும்பத்தார் முன்வந்ததால், அவரது தண்டுவடம் கோவை கங்கா மருத்துவமனைக்கும், கண் கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கும், சிறுநீரகம் தங்கள் மருத்துவமனையிலேயே சிகிச்சையில் உள்ள நோயாளி ஒருவருக்கும், நுரையீரல், இருதயம், கல்லீரல் ஆகியவை சென்னையிலுள்ள மருத்துவமனைகளுக்கும் பாதுகாப்பாக அனுப்பப்பட்டதாக தெரிவித்த மருத்துவர்கள், தாய் மகள் என இருவருக்கும் சிகிச்சை கட்டணம் இலவசமாக்கப்பட்டுள்ளதாகவும், கூறினர்.

அதேபோல், தங்கள் மகள் உயிரிழந்த நிலையில் அவரது உறுப்புகள் ஆறு பேரின் உயிரை காப்பாற்றியுள்ளது மகிழ்ச்சி எனவும் ஏற்கனவே தந்தை இல்லாமல் தற்போது தாயையும் இழந்துள்ள இரண்டு பெண்களுக்கும் அரசு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என வித்யாவின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...