கோயம்புத்தூர் மாநகராட்சியின் மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 67 மற்றும் 68 வது வார்டுகளில் நடைபெற்று வரும் சாலை பணிகள் மற்றும் தூய்மை பணிகளை மாநகராட்சி ஆணையர் பிரதாப் நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார்.
கோவை: கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 68வது வார்டு டாடாபாத் பகுதியில் மாநகராட்சி அறிவியல் பூங்காவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, பூங்காவினை பராமரிக்க உரிய திட்ட மதிப்பீடு தயாரிக்க சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு அறிவுறுத்திய பின்னர்,

67வது வார்டுக்கு உட்பட்ட காந்திபுரம், கிராஸ்கட் சாலையில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் ஆய்வு செய்தார்.

இதனையடுத்து, அப்பகுதியில் உள்ள பொது கழிப்பிடம் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் பிரதாப், கழிப்பிடத்தை சுகாதாரமான முறையில் பராமரித்திட சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.

அதனைத்தொடர்ந்து, 67வது வார்டுக்குட்பட்ட காந்திபுரம், கிராஸ்கட் சாலையில் உள்ள மாநகராட்சி வாகன நிறுத்துமிடத்தில் ஆய்வு செய்தார்.

பின்னர் 82வது வார்டுக்கு உட்பட்ட நவாப் ஹக்கீம் சாலையில் ஆய்வு மேற்கொண்ட அவர், பழுதடைந்த சாலையை செப்பனிட சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வுகளின்போது, துணை மேயா் வெற்றிச் செல்வன், மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, வரி விதிப்பு மற்றும் நிதிக் குழுத் தலைவர் வி.பி.முபசீரா, மாநகரப் பொறியாளர் இளங்கோவன், மாமன்ற உறுப்பினர்கள் வித்யா, கமலாவதி போஸ், உதவி செயற் பொறியாளர்கள் புவனேஸ்வரி, செந்தில்பாஸ்கர், உதவி பொறியாளர்கள் கணேசன், நாகராஜ், பார்மான் அலி, சுகாதார ஆய்வாளர்கள் சந்திரன், சரவணக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
அப்போது, பூங்காவினை பராமரிக்க உரிய திட்ட மதிப்பீடு தயாரிக்க சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு அறிவுறுத்திய பின்னர்,
67வது வார்டுக்கு உட்பட்ட காந்திபுரம், கிராஸ்கட் சாலையில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் ஆய்வு செய்தார்.
இதனையடுத்து, அப்பகுதியில் உள்ள பொது கழிப்பிடம் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் பிரதாப், கழிப்பிடத்தை சுகாதாரமான முறையில் பராமரித்திட சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து, 67வது வார்டுக்குட்பட்ட காந்திபுரம், கிராஸ்கட் சாலையில் உள்ள மாநகராட்சி வாகன நிறுத்துமிடத்தில் ஆய்வு செய்தார்.
பின்னர் 82வது வார்டுக்கு உட்பட்ட நவாப் ஹக்கீம் சாலையில் ஆய்வு மேற்கொண்ட அவர், பழுதடைந்த சாலையை செப்பனிட சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வுகளின்போது, துணை மேயா் வெற்றிச் செல்வன், மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, வரி விதிப்பு மற்றும் நிதிக் குழுத் தலைவர் வி.பி.முபசீரா, மாநகரப் பொறியாளர் இளங்கோவன், மாமன்ற உறுப்பினர்கள் வித்யா, கமலாவதி போஸ், உதவி செயற் பொறியாளர்கள் புவனேஸ்வரி, செந்தில்பாஸ்கர், உதவி பொறியாளர்கள் கணேசன், நாகராஜ், பார்மான் அலி, சுகாதார ஆய்வாளர்கள் சந்திரன், சரவணக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.