சிக்கிமில் பணியின் போது வீரமரணம் அடைந்த கோவையை சேர்ந்த ராணுவ வீரர் உடலுக்கு ஆட்சியர் சமீரன் அஞ்சலி

சிக்கிமில் ராணுவ வாகனம் விபத்தில் சிக்கியதில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கோவையை சேர்ந்த ராணுவ வீரர் மைக்கேல் சாமியின் உடல் கோவை வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் சமீரன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.


கோவை: வடக்கு சிக்கிமில் உள்ள ஜெமாவில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சாலை விபத்தில் 16 ராணுவ வீரர்கள் இறந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த 4 ராணுவ வீரர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.



இந்நிலையில் விபத்தில் படுகாயமடைந்து, தொடர் சிகிச்சையில் இருந்த கோவை மாவட்டம் காரமடை ஆசிரியர் காலனியை சேர்ந்த மைக்கேல்சாமி என்ற ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மைக்கேல்சாமி இறுதியாக மேற்கு திரிபுரா மாநிலம் கோர்கா ரைபில்ஸ் ரெஜிமென்டில் பணியாற்றி வந்தார். விபத்தில் சிக்கிய மைக்கேல்சாமி உடல் உடற்கூறு ஆய்விற்கு பின் ராணுவ விமானம் மூலம் கோவை கொண்டு வரப்பட்டது.



கோவை விமான நிலையம் வந்தடைந்த மைக்கேல் சாமியின் உடலுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.



இதையடுத்து அவரது உடல் ராணுவ வாகனத்தில் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...