சிக்கிமில் பணியின் போது வீரமரணம் அடைந்த கோவையை சேர்ந்த ராணுவ வீரர் உடலுக்கு ஆட்சியர் சமீரன் அஞ்சலி

சிக்கிமில் ராணுவ வாகனம் விபத்தில் சிக்கியதில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கோவையை சேர்ந்த ராணுவ வீரர் மைக்கேல் சாமியின் உடல் கோவை வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் சமீரன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.


கோவை: வடக்கு சிக்கிமில் உள்ள ஜெமாவில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சாலை விபத்தில் 16 ராணுவ வீரர்கள் இறந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த 4 ராணுவ வீரர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.



இந்நிலையில் விபத்தில் படுகாயமடைந்து, தொடர் சிகிச்சையில் இருந்த கோவை மாவட்டம் காரமடை ஆசிரியர் காலனியை சேர்ந்த மைக்கேல்சாமி என்ற ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மைக்கேல்சாமி இறுதியாக மேற்கு திரிபுரா மாநிலம் கோர்கா ரைபில்ஸ் ரெஜிமென்டில் பணியாற்றி வந்தார். விபத்தில் சிக்கிய மைக்கேல்சாமி உடல் உடற்கூறு ஆய்விற்கு பின் ராணுவ விமானம் மூலம் கோவை கொண்டு வரப்பட்டது.



கோவை விமான நிலையம் வந்தடைந்த மைக்கேல் சாமியின் உடலுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.



இதையடுத்து அவரது உடல் ராணுவ வாகனத்தில் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

Newsletter

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...

கோவை சிறைக்குள் தின்பண்டத்தில் மறைத்து கஞ்சா கடத்த முயற்சி : 4 பேர் மீது வழக்குப்பதிவு..!

கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு தின்பண்டங்களுக்குள் மறைத்து கஞ்சா கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத...