அறிவு சார்ந்த நிகழ்ச்சிகளுடன் குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் 'யுகம் 2017' துவக்கம்


குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் 'யுகம் 2017' என்னும் நிகழ்ச்சி நேற்று தொடங்கி இன்று மற்றும் நாளை (பிப்ரவரி 10, 11) ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது



யுகம் 2017-இல் கலை மற்றும் அறிவு சார்ந்த நிகழ்ச்சிகள், பயிலரங்கம் மற்றும் பலவற்றுடன் நடைபெறும் இந்நிகழ்ச்சியானது மாணவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்த ஒரு மேடையாக அமையும். இந்நிகழ்ச்சியில் இந்த வருடம் 12,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.



அறிவு சார்ந்த மற்றும் பயிலரங்கம் பிப்ரவரி 6 ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டது. இதில் 5000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று பயன்பெற்றார்கள். இந்த வருடத்துக்கான கருப்பொருள் "பெண்களின் முன்னேற்றம்" என்ற தலைப்பில் சமூக விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பயன்பெற்றனர். 



மேலும், இந்நிகழ்ச்சியில் டாக்டர் என்.மகாலிங்கம் தென் இந்திய கூடைப்பந்து விளையாட்டுப் போட்டி இவ்வாண்டு சேர்க்கப்பட்டுள்ளது.



இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பெண்களின் முன்னேற்றத்தைப் குறித்து மீரா எர்டா, ஷெபாலி தாதாபாய் மற்றும் நீபா நம்பூதிரி ஆகியோர் தங்களின் தூண்டுதல் மற்றும் தடைகளைப் பற்றி மாணவியர்களிடம் பகிர்ந்தனர்.



ஹீரோஸ் அன்லிமிடெட் என்ற தலைப்பில் அண்ணாதுரை, மூர்த்தி மேகவன், சேகர், பாலாஜி மற்றும் ஹரிஹரன் போன்ற சாதனையாளர்கள் தங்களின் அனுபவங்கள் குறித்து பகிர்ந்தனர்.



நீர் ஏவுகணைக்கான போட்டி, ரோபோகளுக்கான கால்பந்து போட்டி, ரேடியோவால் இயக்கப்படும் ஐசி என்ஜின் பந்தய போட்டி, காகிதத்தால் ஆடை அலங்காரம் செய்யும் போட்டி, மற்றும் பல போட்டிகள் இந்நிகழ்ச்சியில் நடைபெற்றது

Newsletter

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...