கோவை வெள்ளக்கிணறு ரயில்வே கேட் அருகே கஞ்சா விற்ற இரு இளைஞர்கள் கைது

துடியலூர் உதவி ஆய்வாளர் குரு சந்திர வடிவேல் தலைமையிலான காவலர்கள் வெள்ளக்கிணறு ரயில்வே கேட் அருகே உள்ள முள்ளுக்காடு பகுதியில் கஞ்சா பொட்டலங்களை விற்பதற்காக வைத்திருந்த இரு வாலிபர்களை கைது செய்தனர்.



கோவை: கோவை மாவட்டத்தில் கஞ்சா போதை மாத்திரை உள்ளிட்டவற்றை விற்கும் சட்டவிரோத கும்பலுக்கு எதிராக போலீசார் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, கல்லூரிகள் உள்ள இடங்களில் தனிப்படை போலீசார் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். அதேபோல, பொதுமக்கள் அளிக்கும் ரகசிய தகவல்களை வைத்து கஞ்சா வியாபாரிகளை கைது செய்து வருகின்றனர்.

அதன்படி, கோவை துடியலூர் பகுதியில் கஞ்சா விற்கும் நபர்கள் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதனடிப்படையில், இன்று (30.12.2022) உதவி ஆய்வாளர் குரு சந்திரவடிவேல் மற்றும் காவலர்களுடன் வெள்ளக்கிணறு ரயில்வே கேட் அருகே உள்ள முள்ளுக்காடு பகுதிக்கு விரைந்து சென்று சந்தேகத்திற்கிடமான வகையில் இருவர் நின்று கொண்டிருந்த நபர்களை பிடித்து விசாரணையில் ஈடுபட்டனர்.

விசாரணையில், அவர்கள் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் கே.கே.புதூர் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் (21) மற்றும் ஜோசப் டேனியல் (21) என்பதும் தெரியவந்துள்ளது.

இரண்டு நபர்களையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விற்பனைக்கு வைத்திருந்த 1.100 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர், இருவரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...