கோவையில் வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி மோசடி - தனியார் நிறுவன இயக்குனருக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.3 கோடி அபராதம்….!

வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி 65 பேரிடம் மோசடியில் ஈடுபட்ட தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இயக்குநர் ஜெகதீஸ்வரன் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.3 கோடி அபராதம் விதித்து டேன்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.


கோவை: கோவை பேரூர் பகுதியை சேர்ந்தவர் ரவிசந்திரன் எலக்ட்ரிசியன். இவரது மனைவி கீதாராணி. கடந்த 2017 -ல், பேரூர் காளாம்பாளையம் பகுதியில் செயல்பட்ட தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை, மனை வாங்க கீதாரணி அனுகியுள்ளார். அப்போது, அந்த நிறுவனத்தினர், வாடகை விலையில் சொந்த வீடு வாங்கலாம் என்ற திட்டத்தின் கீழ் இணையுமாறு ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

இதனை நம்பிய கீதாராணி, இரண்டு தவணைகளாக ரூ.6.30 லட்சம் பணத்தை நிறுவன நிர்வாக இயக்குநர் ஜெகதீஸ்வரனிடம் கொடுத்துள்ளார். இதற்காக, தீத்திபாளையம் பகுதியில் இடத்தையும் வழங்கியுள்ளனர். அங்கு கீதாராணி குடும்பத்தினர் பூமி பூஜை போட்டு பணிகளை துவங்க இருந்த நிலையில், அதே இடத்தில் இரண்டு நாட்கள் கழித்து வேறு ஒருவர் பூமி பூஜை போட்டுள்ளார்.

அதிர்ச்சியடைந்த கீதாராணி, அவர் ஏமாற்றப்பட்டது தெரிய வந்ததை அடுத்து, அந்நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர்கள், பணத்தை திருப்பிக் கொடுப்பதாக கூறி, இரண்டு காசோலைகளில் ரூ.6.30 லட்சம் பூர்த்தி செய்து கொடுத்துள்ளனர்.

அதை வங்கியில் செலுத்திய போது, போதிய பணம் இல்லாததால் காசோலை பவுன்ஸ் ஆகியுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட கீதாராணி, பேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பின்னர், வழக்கு கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அந்நிறுவன இயக்குநர் ஜெகதீஸ்வரன், விஜயகுமார், முகமது ரபீக், உமாதேவி ஆகியோர் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து விசாரணையில் இதேபோல 65 பேரிடம் சுமார் ரூ.3.03 கோடி வரை ஏமாற்றியது தெரியவந்தது. இந்த வழக்கு விசாரணை கோவை டேன்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இன்று வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், முக்கிய குற்றவாளியான ஜெகதீஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.3 கோடி அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் இருந்து, விஜயகுமார், முகமது ரபீக், உமாதேவி ஆகிய மூவரும் விடுவிக்கப்பட்டனர்.

Newsletter

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...

ஆதவ் அர்ஜுனாவை நீக்க வேண்டும்: கோவையில் கிருஷ்ணசாமி

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் குடும்பத்தினர் மீதா...

தங்க விலை உயர்வு: வரிச்சட்ட மாற்றம் கோரி கோவை நகை உற்பத்தியாளர்கள்

தங்க விலை உயர்வால் மூலதன நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த கோயம்புத்தூர் நகை உற்பத்தியாளர் சங்கம், வரிச்சட்ட மாற்றங்கள்...

பேரூர் டி.எஸ்.பி நடப்பயண ரோந்து; பொதுமக்களிடம் குறைகள் கேட்பு

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பேரூர் டி.எஸ்.பி கால்நடை ரோந்து மேற்கொண்டு பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்...

கூடலூரில் அரசு பள்ளிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ சுனில் ஆனந்த்

கூடலூர் நகராட்சிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட மேட்டுப்பாளையம் எம்எல்ஏ சுனில் ஆனந்த், பழுதடைந்த குடிநீர் தொட...