கோவையில் வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி மோசடி - தனியார் நிறுவன இயக்குனருக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.3 கோடி அபராதம்….!

வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி 65 பேரிடம் மோசடியில் ஈடுபட்ட தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இயக்குநர் ஜெகதீஸ்வரன் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.3 கோடி அபராதம் விதித்து டேன்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.


கோவை: கோவை பேரூர் பகுதியை சேர்ந்தவர் ரவிசந்திரன் எலக்ட்ரிசியன். இவரது மனைவி கீதாராணி. கடந்த 2017 -ல், பேரூர் காளாம்பாளையம் பகுதியில் செயல்பட்ட தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை, மனை வாங்க கீதாரணி அனுகியுள்ளார். அப்போது, அந்த நிறுவனத்தினர், வாடகை விலையில் சொந்த வீடு வாங்கலாம் என்ற திட்டத்தின் கீழ் இணையுமாறு ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

இதனை நம்பிய கீதாராணி, இரண்டு தவணைகளாக ரூ.6.30 லட்சம் பணத்தை நிறுவன நிர்வாக இயக்குநர் ஜெகதீஸ்வரனிடம் கொடுத்துள்ளார். இதற்காக, தீத்திபாளையம் பகுதியில் இடத்தையும் வழங்கியுள்ளனர். அங்கு கீதாராணி குடும்பத்தினர் பூமி பூஜை போட்டு பணிகளை துவங்க இருந்த நிலையில், அதே இடத்தில் இரண்டு நாட்கள் கழித்து வேறு ஒருவர் பூமி பூஜை போட்டுள்ளார்.

அதிர்ச்சியடைந்த கீதாராணி, அவர் ஏமாற்றப்பட்டது தெரிய வந்ததை அடுத்து, அந்நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர்கள், பணத்தை திருப்பிக் கொடுப்பதாக கூறி, இரண்டு காசோலைகளில் ரூ.6.30 லட்சம் பூர்த்தி செய்து கொடுத்துள்ளனர்.

அதை வங்கியில் செலுத்திய போது, போதிய பணம் இல்லாததால் காசோலை பவுன்ஸ் ஆகியுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட கீதாராணி, பேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பின்னர், வழக்கு கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அந்நிறுவன இயக்குநர் ஜெகதீஸ்வரன், விஜயகுமார், முகமது ரபீக், உமாதேவி ஆகியோர் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து விசாரணையில் இதேபோல 65 பேரிடம் சுமார் ரூ.3.03 கோடி வரை ஏமாற்றியது தெரியவந்தது. இந்த வழக்கு விசாரணை கோவை டேன்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இன்று வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், முக்கிய குற்றவாளியான ஜெகதீஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.3 கோடி அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் இருந்து, விஜயகுமார், முகமது ரபீக், உமாதேவி ஆகிய மூவரும் விடுவிக்கப்பட்டனர்.

Newsletter

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...