கோவையில் வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி மோசடி - தனியார் நிறுவன இயக்குனருக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.3 கோடி அபராதம்….!

வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி 65 பேரிடம் மோசடியில் ஈடுபட்ட தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இயக்குநர் ஜெகதீஸ்வரன் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.3 கோடி அபராதம் விதித்து டேன்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.


கோவை: கோவை பேரூர் பகுதியை சேர்ந்தவர் ரவிசந்திரன் எலக்ட்ரிசியன். இவரது மனைவி கீதாராணி. கடந்த 2017 -ல், பேரூர் காளாம்பாளையம் பகுதியில் செயல்பட்ட தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை, மனை வாங்க கீதாரணி அனுகியுள்ளார். அப்போது, அந்த நிறுவனத்தினர், வாடகை விலையில் சொந்த வீடு வாங்கலாம் என்ற திட்டத்தின் கீழ் இணையுமாறு ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

இதனை நம்பிய கீதாராணி, இரண்டு தவணைகளாக ரூ.6.30 லட்சம் பணத்தை நிறுவன நிர்வாக இயக்குநர் ஜெகதீஸ்வரனிடம் கொடுத்துள்ளார். இதற்காக, தீத்திபாளையம் பகுதியில் இடத்தையும் வழங்கியுள்ளனர். அங்கு கீதாராணி குடும்பத்தினர் பூமி பூஜை போட்டு பணிகளை துவங்க இருந்த நிலையில், அதே இடத்தில் இரண்டு நாட்கள் கழித்து வேறு ஒருவர் பூமி பூஜை போட்டுள்ளார்.

அதிர்ச்சியடைந்த கீதாராணி, அவர் ஏமாற்றப்பட்டது தெரிய வந்ததை அடுத்து, அந்நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர்கள், பணத்தை திருப்பிக் கொடுப்பதாக கூறி, இரண்டு காசோலைகளில் ரூ.6.30 லட்சம் பூர்த்தி செய்து கொடுத்துள்ளனர்.

அதை வங்கியில் செலுத்திய போது, போதிய பணம் இல்லாததால் காசோலை பவுன்ஸ் ஆகியுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட கீதாராணி, பேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பின்னர், வழக்கு கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அந்நிறுவன இயக்குநர் ஜெகதீஸ்வரன், விஜயகுமார், முகமது ரபீக், உமாதேவி ஆகியோர் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து விசாரணையில் இதேபோல 65 பேரிடம் சுமார் ரூ.3.03 கோடி வரை ஏமாற்றியது தெரியவந்தது. இந்த வழக்கு விசாரணை கோவை டேன்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இன்று வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், முக்கிய குற்றவாளியான ஜெகதீஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.3 கோடி அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் இருந்து, விஜயகுமார், முகமது ரபீக், உமாதேவி ஆகிய மூவரும் விடுவிக்கப்பட்டனர்.

Newsletter

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...