கோவை சிங்காநல்லூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 36 சவரன் நகை மற்றும் பணம் திருட்டு

நீலிகோணாம்பாளையம் நேதாஜிபுரம் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 36 சவரன் நகைகள் மற்றும் ரூ.13 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.



கோவை: கோவை சிங்காநல்லூர் நீலிகோணாம்பாளையம் நேதாஜிபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (37). இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மனித வளத்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

கடந்த 24 ஆம் தேதி குடும்பத்துடன் கோவை வந்த ரமேஷ், திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது.



இந்நிலையில், நேற்று அவரது வீட்டின் அருகே வசித்து வரும் மகேஷ்வரி என்ற பெண், ரமேஷின் வீட்டுக்கே சென்று பார்த்த போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக, ரமேஷூக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து கிளம்பி வந்த ரமேஷ், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து

சிங்கநல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்தார்.



இதையடுத்து, கோவை விரைந்த ரமேஷ், வீட்டுக்குள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு உள்ளே இருந்த சுமார் 36 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.13 ஆயிரம் திருடப்பட்டது தெரியவந்தது.



இதையடுத்து, தடயவியல் துறையினர் அங்கு பதிவான 6 கைரேகைகளை சேகரித்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், 36 சவரன் தங்க நகைகளுடன் தப்பிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...