கோவை குருடம்பாளையத்தில் நடைபெற்ற கொ.ம.தே.க ஊராட்சி அளவிலான ஆலோசனை கூட்டம் - 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட குருடம்பாளையம் பகுதியில் நடைபெற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஊராட்சி ஆலோசனை கூட்டத்தில், கட்சியில் உறுப்பினர்களை அதிக அளவில் சேர்ப்பது உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


கோவை: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குருடம்பாளையம் பகுதியில் கடந்த 24ஆம் தேதி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஊராட்சி அளவிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் ஜீவானந்தம் மனோகரனுக்கு சொந்தமான ரோஜா தோட்டத்தில் மாவட்ட விவசாய அணி துணைச் செயலாளர் A.P.வரதராஜன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில், கோவை மேற்கு மாவட்ட செயலாளரும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான K.S.குழந்தைவேலு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்த கூட்டத்தில், முக்கியமான 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1) வரும் 2023 ஆம் ஆண்டில் கோவை மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிளைகளிலும் நடைபெறும் கொடியேற்று விழாவை சிறப்பாக நடத்த வேண்டும்.

2) கிளைகள் தோறும் கட்சி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும்.

3) கிளைகளில் உள்ள உறுப்பினர்களின் இல்லத்திற்கு கட்சியின் காலண்டர்களை (Yearly calendar ) கொண்டு சேர்க்க வேண்டும்.

4) முக்கியமான கிராமப்புற அடிப்படை வசதிகள் மற்றும் பொதுமக்கள் பிரச்சினைகளுக்காக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி குரல் கொடுக்க வேண்டும்.

5) "மறுமலர்ச்சி கொங்குநாடு" பத்திரிக்கையின் சந்தாவை அதிகப்படுத்த வேண்டும்.

6) தீரன் படை மற்றும் மகளிர் அணி அதிகப்படியான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.

ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



இந்த கூட்டத்தில், ஒன்றிய செயலாளர் தங்கவேல் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் கீரணத்தம் தனுஷ்கோடி, மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் கவிதா அருள்பிரகாஷ், மாவட்ட விவசாய அணி செயலாளர் மருதாசலம், ஒன்றிய துணைச் செயலாளர் பன்னிமடை பொன்னுச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதேபோல், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய பொறுப்பாளர்கள் கணேசன், தங்கவேல் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கவுன்சிலர் தீபன்குமார், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் ஸ்ரீதர் கீரணத்தம் ஊராட்சி கவுன்சிலர் பரமேஸ்வரன்,

மேலும், கிளை நிர்வாகிகள் சூர்யா, ராஜகோபால், P.பாபு, தாமோதரசாமி, மகளிர் அணி பொறுப்பாளர்கள் ஜெகதீஸ்வரி, காஞ்சனா சாவித்திரி, காயத்ரி பெரியநாயக்கன் பாளையம் பேரூராட்சி நகர செயலாளர் பாலு (எ) பாலகிருஷ்ணன், பன்னிமடை ஊராட்சி செயலாளர் சிவஞானம் மாவட்ட IT WING செயலாளர் கார்த்திகேயன் ஆறுக்குட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், கூட்டம் தொடங்குவதற்கு முன் மாவீரன் தீரன் சின்னமலை திருவுருவப் படத்திற்கு அனைத்து நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...