கோவை குருடம்பாளையத்தில் நடைபெற்ற கொ.ம.தே.க ஊராட்சி அளவிலான ஆலோசனை கூட்டம் - 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட குருடம்பாளையம் பகுதியில் நடைபெற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஊராட்சி ஆலோசனை கூட்டத்தில், கட்சியில் உறுப்பினர்களை அதிக அளவில் சேர்ப்பது உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


கோவை: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குருடம்பாளையம் பகுதியில் கடந்த 24ஆம் தேதி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஊராட்சி அளவிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் ஜீவானந்தம் மனோகரனுக்கு சொந்தமான ரோஜா தோட்டத்தில் மாவட்ட விவசாய அணி துணைச் செயலாளர் A.P.வரதராஜன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில், கோவை மேற்கு மாவட்ட செயலாளரும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான K.S.குழந்தைவேலு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்த கூட்டத்தில், முக்கியமான 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1) வரும் 2023 ஆம் ஆண்டில் கோவை மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிளைகளிலும் நடைபெறும் கொடியேற்று விழாவை சிறப்பாக நடத்த வேண்டும்.

2) கிளைகள் தோறும் கட்சி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும்.

3) கிளைகளில் உள்ள உறுப்பினர்களின் இல்லத்திற்கு கட்சியின் காலண்டர்களை (Yearly calendar ) கொண்டு சேர்க்க வேண்டும்.

4) முக்கியமான கிராமப்புற அடிப்படை வசதிகள் மற்றும் பொதுமக்கள் பிரச்சினைகளுக்காக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி குரல் கொடுக்க வேண்டும்.

5) "மறுமலர்ச்சி கொங்குநாடு" பத்திரிக்கையின் சந்தாவை அதிகப்படுத்த வேண்டும்.

6) தீரன் படை மற்றும் மகளிர் அணி அதிகப்படியான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.

ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



இந்த கூட்டத்தில், ஒன்றிய செயலாளர் தங்கவேல் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் கீரணத்தம் தனுஷ்கோடி, மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் கவிதா அருள்பிரகாஷ், மாவட்ட விவசாய அணி செயலாளர் மருதாசலம், ஒன்றிய துணைச் செயலாளர் பன்னிமடை பொன்னுச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதேபோல், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய பொறுப்பாளர்கள் கணேசன், தங்கவேல் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கவுன்சிலர் தீபன்குமார், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் ஸ்ரீதர் கீரணத்தம் ஊராட்சி கவுன்சிலர் பரமேஸ்வரன்,

மேலும், கிளை நிர்வாகிகள் சூர்யா, ராஜகோபால், P.பாபு, தாமோதரசாமி, மகளிர் அணி பொறுப்பாளர்கள் ஜெகதீஸ்வரி, காஞ்சனா சாவித்திரி, காயத்ரி பெரியநாயக்கன் பாளையம் பேரூராட்சி நகர செயலாளர் பாலு (எ) பாலகிருஷ்ணன், பன்னிமடை ஊராட்சி செயலாளர் சிவஞானம் மாவட்ட IT WING செயலாளர் கார்த்திகேயன் ஆறுக்குட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், கூட்டம் தொடங்குவதற்கு முன் மாவீரன் தீரன் சின்னமலை திருவுருவப் படத்திற்கு அனைத்து நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...