திருப்பூரில் கழிவுநீர் இறக்கிவிட பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தர வேண்டும் - கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் ஆட்சியரிடம் மனு

கோவை, சேலம் மாநகராட்சிகளில் உள்ளது போல திருப்பூருக்கும் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தரக்கோரி கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் சுமார் 60 கழிவுநீர் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமார் 150 குடும்பங்கள் வாழ்வாதாரம் பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தங்கள் வாகனங்களில் ஏற்றும் கழிவு நீரை விவசாய நிலங்களில் உரமாக இறக்கி விட்டு வருகின்றனர். அவ்வப்போது இப்படி விடப்படும் கழிவுநீரால் பொதுமக்களுக்கும் இவர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது.



இதன் காரணமாக கோவை, சேலம் போன்ற மாநகராட்சிகளில் செயல்பட்டு வரும் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் போல, கழிவுநீர் இறக்கி விடுவதற்கு ஏற்பாடு செய்து தர வேண்டும் என வலியுறுத்தி கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...