தந்தை பெரியார் நினைவு நாள்: கோவை அரசு மருத்துவமனைக்கு 100 பேர் உடல் தானம் செய்தனர்

தந்தை பெரியாரின் 49 வது நினைவு நாளை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் காட்டாறு இதழ் மற்றும் ஆதி தமிழர் பேரவை சார்பில் 100 பேர் தங்கள் உடலை இறப்புக்கு பின் தானமாக அளிப்பதாக ஒப்புதல் பத்திரத்தை அளித்தனர்.



கோவை: தந்தை பெரியாரின் 49வது நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக காட்டாறு இதழ், மற்றும் ஆதி தமிழர் பேரவை சார்பில், திராவிடர் தளம் என்ற பெயரில், 100 பேர் உடல் தானம் செய்வதற்கான ஒப்புதல் விண்ணப்பத்தை கோவை அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவர் மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் வழங்கியுள்ளனர்.



ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான், காட்டாறு வெளியீட்டை சேர்ந்த தாமரைக்கண்ணன், தோழர் அறக்கட்டளையை சேர்ந்த சாந்தகுமார், ஆதித்தமிழர் பேரவையின் பொதுசெயாளர் ரவிக்குமார் உள்ளிட்டோர் இந்த ஒப்புதலை வழங்கினர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, ஒவ்வொருவரும் இறப்பிற்கு பின் எங்களது உடலை கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் பயிற்சிக்காக வழங்கியுள்ளதால், இறந்த பிறகு எங்கள் உடல் ஏதாவது ஒரு வகையில் பயன்படும்.



முதல் கட்டமாக 100 நபர்கள் அளித்த ஒப்புதல்கள் கோவை அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் கொடுத்துள்ளோம், மேலும் பலர் உடல் தானம் செய்ய உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...