தந்தை பெரியார் நினைவு நாள்: கோவை அரசு மருத்துவமனைக்கு 100 பேர் உடல் தானம் செய்தனர்

தந்தை பெரியாரின் 49 வது நினைவு நாளை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் காட்டாறு இதழ் மற்றும் ஆதி தமிழர் பேரவை சார்பில் 100 பேர் தங்கள் உடலை இறப்புக்கு பின் தானமாக அளிப்பதாக ஒப்புதல் பத்திரத்தை அளித்தனர்.



கோவை: தந்தை பெரியாரின் 49வது நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக காட்டாறு இதழ், மற்றும் ஆதி தமிழர் பேரவை சார்பில், திராவிடர் தளம் என்ற பெயரில், 100 பேர் உடல் தானம் செய்வதற்கான ஒப்புதல் விண்ணப்பத்தை கோவை அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவர் மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் வழங்கியுள்ளனர்.



ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான், காட்டாறு வெளியீட்டை சேர்ந்த தாமரைக்கண்ணன், தோழர் அறக்கட்டளையை சேர்ந்த சாந்தகுமார், ஆதித்தமிழர் பேரவையின் பொதுசெயாளர் ரவிக்குமார் உள்ளிட்டோர் இந்த ஒப்புதலை வழங்கினர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, ஒவ்வொருவரும் இறப்பிற்கு பின் எங்களது உடலை கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் பயிற்சிக்காக வழங்கியுள்ளதால், இறந்த பிறகு எங்கள் உடல் ஏதாவது ஒரு வகையில் பயன்படும்.



முதல் கட்டமாக 100 நபர்கள் அளித்த ஒப்புதல்கள் கோவை அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் கொடுத்துள்ளோம், மேலும் பலர் உடல் தானம் செய்ய உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...