கோவை நீலாம்பூர் பகுதியில் அதிகாலை கோர விபத்து: காவல் ஆய்வாளரின் மகன் பரிதாபமாக பலி..!

இன்று அதிகாலை கரையம்பாளையம் ஜங்ஷன் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த கல் மீது கார் மோதியதில், காரில் பயணித்த ஒருவர் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.



கோவை நீலாம்பூர், கரையம்பாளையம் ஜங்ஷன் அருகே அதிகாலை நடந்த கோர விபத்தில், காவல் ஆய்வாளரின் மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றுபவர் முருகாசலம். இவர் மகன் கார்த்தி (18), அங்குள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகின்றார். இவரும், இவரது 17 வயதுடைய நண்பரும் நேற்று காரில் பயணத்திருக்கின்றனர். அப்போது, கார்த்தியின் நண்பர் காரை ஓட்டியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அதிகாலை கரையம்பாளையம் ஜங்ஷன் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த கல் மீது கார் மோதியது. இதில், காரில் முன் பக்கம் பலத்த சேதம் அடைந்தது. மேலும், காரில் பயணித்த இருவரும் படுகாயம் அடைத்தனர்.

இதில், காவல் அனையாளரின் மகனான கார்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அவருடன் இருந்த கார்த்திக்கின் நண்பர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் எங்கிருந்து வந்தது? எதற்காக இங்கே அதிகாலை வேளையில் சென்றார்கள்? என விபத்தின் பின்னணி குறித்து போலீசார் புலன் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...