உதகையில் நடைபெற்ற ‘மோற்ட்வர்த்’ திருவிழா - பாரம்பரிய உடையணிந்து தோடர் இன பழங்குடி மக்கள் உற்சாக நடனம்..!

உதகையில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக மந்து பகுதியில் பழங்குடியின மக்கள் நடத்திய ‘மோற்ட்வர்த்’ திருவிழாவில் தோடர் இன பழங்குடி மக்கள், பாரம்பரிய உடையணிந்து நடனமாடியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தோடர், குரும்பர், இருளர், பனியர், காட்டு நாயக்கர் என 6 வகையான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இதில் தோடர் பழங்குடியின மக்கள் உதகை, கோத்தகிரி, குன்னூர், குந்தா உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அடர்ந்த வனப் பகுதிகளை ஒட்டியுள்ள மந்து எனப்படும் 70 கிராமங்களில் வசித்து வருகின்றனர். தங்களுக்கென பாரம்பரிய உடை, தனி கலாச்சாரத்துடன் வாழ்ந்து வரும் இவர்கள் எருமைகளை வளர்த்து வருகின்றனர்.



இந்நிலையில், இவர்கள் ஆண்டுதோறும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக உதகை அருகேயுள்ள முத்தநாடு மந்து பகுதியில் அவர்களது பாரம்பரிய கோவில்களான கூம்பு வடிவிலான முன்போ மற்றும் அரைவட்ட வடிவிலான அடையாள் வேல் கோவில்களில் மொற்ட்வர்த் எனப்படும் பாரம்பரிய விழாவை கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.



இந்த நிலையில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக 70-க்கும் மேற்பட்ட மந்துகளில் இருந்த வந்திருந்த தோடர் இன ஆண்கள் பாரம்பரிய உடை அணிந்து வந்து கலந்து கொண்டனர்.



அப்போது கூம்பு வடிவ முன்போ கோயிலில் கூடிய தோடர் இன மக்கள் ஒருவருக்கு ஒரு ரூபாய் வீதம் காணிக்கை செலுத்தி வழிபட்டனர். பின்பு அனைவரும் அரை வட்ட வடிவிலான அடையாள்வேல் கோவில் வந்து வழிபாடு நடத்தினர். இதனையடுத்து, இரண்டு கோவில்கள் முன்பு பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர்.

இதனைதொடர்ந்து, இளைஞர்கள் தங்களது வலிமையை வெளிப்படுத்தும் விதமாக இளவட்ட கல்லை தூக்கி திறமையை வெளிப்படுத்தினர். தோடர் இன மக்கள் 1500 பேர் மட்டுமே வாழ்த்து வரும் நிலையில் தங்களது குலம் மற்றும் எருமைகள் பெருகவும், விவசாயம் செழிக்கவும், உலக மக்கள் நன்மை பெற வேண்டி மொர்ட் வர்த் திருவிழாவை கொண்டாடி இறைவனை வழிபாடு நடத்தியது வெகுவாக கவர்ந்தது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...