திருப்பூரில் 5 சவரன் நகைக்காக மூதாட்டி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கு - ஒருவர் கைது

திருப்பூர் எஸ்.வி காலனி அருகே நேற்றைய தினம் 5 சவரன் நகைக்காக மூதாட்டி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில், சிசிடிவி காட்சிகள் உதவியுடன் தேடப்பட்டு வந்த குற்றவாளி ஆறுமுகத்தை சேலத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் அடுத்த எஸ்.வி காலனி மெயின் ரோடு, டி.எஸ்.ஆர் லே அவுட் பகுதியை சேர்ந்த முதியோர் தம்பதியான முத்துசாமி மற்றும் சந்திராமணி ஆகிய இருவரும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். இவர்களது மகன் இவர்களது வீட்டருகே கெமிக்கல் கம்பனி நடத்தி கொண்டு, கே.பி.என் காலனியில் குடியிருந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்றைய தினம் மூதாட்டி சந்திராமணி அதிகாலையில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, மர்ம நபர் ஒருவர், வீட்டுக்குள் புகுந்து, அவரை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு, அவரது கழுத்தில் இருந்த 5 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றார்.

இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, 55 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் வீட்டிற்கு வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இந்த காட்சிகளை மூதாட்டியின் கணவரிடம் காட்டிய போது, அந்த மர்ம நபர், கடந்த சில நாட்களாக அவர்களுடன் பழகி வந்த ஆறுமுகம் என்பது தெரியவந்தது. இதையடுத்து, திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரபாகரன் உத்தரவின் பேரில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளி ஆறுமுகத்தை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில், குற்றவாளி ஆறுமுகம் சேலத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்ததை அடுத்து போலீசார் சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் வீட்டில் இருந்த ஆறுமுகத்தை கைது செய்து திருப்பூர் அழைத்து வந்தனர்.

மேலும், கொலைக்கான காரணம் என்ன? இந்த கொலை சம்பவத்தில் யாரேனும் தொடர்பில் இருக்கிறார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...