கோவையில் விபச்சாரத்துக்கு அழைத்து மாட்டிக்கொண்ட புரோக்கர்கள் - சாதூரியமாக போலீசில் சிக்க வைத்த நண்பர்கள்..!

கோவை புதுப்பாளையம் அருகே விபச்சாரத்திற்கு அழைத்த புரோக்கர்களை, இளைஞர்கள் இருவர் சாதூர்யமாக போலீசில் சிக்க வைத்த நிலையில், அங்கிருந்து 6 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.



கோவை: கோவை பிரஸ் காலனி சாந்தி மேடு பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் மற்றும் அவரது நண்பர் கிருஷ்ணகுமார் ஆகியோர் கீரணத்தம் பகுதியில் உள்ள தனியார் வங்கிக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, கீரணத்தம், புதுப்பாளையம் அருகே ஒருவர் இவர்களது இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி தனது பெயர் குணசேகரன் என்றும் என்னுடன் வந்தால் நீங்கள் பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். மேலும், உல்லாசமாக இருக்க ஒரு மணி நேரத்திற்கு 1000 ரூபாய் தந்தால் போதும் என்று கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து நந்தகுமாரும் அவரது நண்பரும் குணசேகரன் சொன்ன முகவரியான எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீரணத்தம் ஊராட்சி பகுதியில் லே அவுட்டில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு 6 பெண்கள் மற்றும் 3 நபர்கள் இருந்துள்ளனர்.

இவர்கள் செய்யும் சட்டத்திற்கு புறம்பான செயல் குறித்து போலீசாரிடம் தெரிவிக்க திட்டமிட்ட நந்தகுமார் மற்றும் கிருஷ்ணகுமார், தங்களிடம் பணம் இல்லை ஏ.டி.எம்மில் பணம் எடுத்து வருவதாக கூறிவிட்டு வெளியே வந்துள்ளனர்.

அப்போது, அங்கு கோவில்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருப்பதை பார்த்து அவர்களிடம் இருவரும் தகவல் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கோவில்பாளையம் காவல்துறையினர் அவர்கள் சொன்ன வீட்டில் சோதனை நடத்தினர்.

அப்போது கோவை துடியலூர், சாய்பாபாகாலனி, நல்லாம்பாளையம், மற்றும் உடுமலைப்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த 6 பெண்களை வைத்து நான்கு பேர் கொண்ட கும்பல் விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட ஆறு பெண்களையும் மீட்ட போலீசார், அவர்களை காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்

பின்னர், விபச்சாரத்தில் பெண்களை ஈடுபடுத்திய பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த குணசேகரன்(45), விஜயகுமார் (40), சுந்தராபுரத்தைச் சேர்ந்த முருகவேல் (30), ராஜபாளையத்தை சேர்ந்த மகேந்திரன்(28) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இளைஞர்களை விபச்சாரத்துக்கு அழைத்து, போலீசாரிடம் வசமாக சிக்கிக் கொண்ட கும்பலை சேர்ந்த 4 பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும், பெண்களை இதுபோன்று தவறாக பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை பாயும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...