திருப்பூரில் மூதாட்டியை கழுத்தறுத்து கொலை செய்து விட்டு 5 சவரன் நகை கொள்ளை - சிசிடிவி காட்சிகளை கொண்டு மர்மநபருக்கு போலீசார் வலைவீச்சு..!

திருப்பூர் எஸ்.வி காலணி சாலை அருகே வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த மூதாட்டியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு, 5 சவரன் நகையை கொள்ளையடித்து சென்ற நிலையில் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.



திருப்பூர்: திருப்பூர் அடுத்த எஸ்.வி காலனி மெயின் ரோடு, டி.எஸ்.ஆர் லே அவுட் பகுதியை சேர்ந்தவர்கள் முத்துசாமி - சந்திராமணி தம்பதி. இருவரும் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவர்களது மகன் இவர்களது வீட்டருகே கெமிக்கல் கம்பனி நடத்தி கொண்டு, கே.பி.என் காலனியில் குடியிருந்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் சந்திராமணி காலை 4.50 மணிக்கு எழுந்து வீட்டின் முன் பக்க கேட்டை திறந்து வைத்துவிட்டு, கணவருக்காக சமையல் செய்து கொண்டிருந்துள்ளார்.



இந்நிலையில் அவர், நீண்ட நேரமாக வெளியே வராததால் சந்தேகமடைந்த முத்துசாமி உள்ளே சென்று பார்த்த போது, கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார்.

ரத்த வெள்ளத்தில் மனைவியை கண்டு அதிர்ச்சி அடைந்த முத்துசாமி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.



சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த திருப்பூர் வடக்கு போலீசார் சந்திராமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



இதையடுத்து போலீசார் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்த போது, 55 வயது மதிக்கதக்க மர்ம நபர் ஒருவர் வீட்டிற்க்குள் சென்று விட்டு சிறிது நேரத்தில் வெளியேறிய காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதையடுத்து, அடையாளம் தெரியாத அந்த நபர் சந்திராமணியின் கழுத்தை அறுத்து அவர் அணிந்திருந்த 5 சவரன் நகையை திருடி சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில், சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு போலீசார் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

அதிகாலை நேரத்தில் மூதாட்டியை கழுத்தறுத்து 5 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...