கோவையில் கார் மோதியதில் 2 நாய்கள் உயிரிழந்த சோகம் - ஓட்டுனர் மீது போலீசார் வழக்குப்பதிவு

ரத்தினபுரி அருகே ஆஸ்டின் என்பவர் தனது 2 நாய் குட்டிகளுடன் நடந்து சென்றபோது வேகமாக வந்த கார் மோதியதில், 2 நாய்களும் உயிரிழந்த நிலையில், ஓட்டுனர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் சேரன் மாநகர் பகுதியை சேர்ந்தவர் ஆஸ்டின். செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட இவர் தனது வீட்டில் நாய்கள் உள்ளிட்ட பல்வேறு செல்லப்பிராணிகளை ஆசையாக வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில், கோவை ரத்தினபுரி பகுதியில் தனது 2 நாய் குட்டிகளுடன் ஆஸ்டின் நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வேகமாக வந்த கார் ஒன்று, நாய்கள் மீது மோதியது.

இந்த விபத்தில் ஆஸ்டின் அழைத்து சென்ற இரண்டு நாய்களும் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இதனை தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக ஆஸ்டின் ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அவரது புகாரின் பேரில் காரை ஓட்டி வந்த ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவர் மீது ஐ.பி.சி 429/பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பிரிவு வழக்குகளுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

செல்லமாக வளர்த்த இரண்டு நாய்கள் விபத்தில் பலியான சம்பவத்தால் ஆஸ்டின் குடும்பத்தார் சோகத்தில் மூழ்கி இருக்கின்றனர்.

Newsletter

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...