கோவையில் கார் மோதியதில் 2 நாய்கள் உயிரிழந்த சோகம் - ஓட்டுனர் மீது போலீசார் வழக்குப்பதிவு

ரத்தினபுரி அருகே ஆஸ்டின் என்பவர் தனது 2 நாய் குட்டிகளுடன் நடந்து சென்றபோது வேகமாக வந்த கார் மோதியதில், 2 நாய்களும் உயிரிழந்த நிலையில், ஓட்டுனர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் சேரன் மாநகர் பகுதியை சேர்ந்தவர் ஆஸ்டின். செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட இவர் தனது வீட்டில் நாய்கள் உள்ளிட்ட பல்வேறு செல்லப்பிராணிகளை ஆசையாக வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில், கோவை ரத்தினபுரி பகுதியில் தனது 2 நாய் குட்டிகளுடன் ஆஸ்டின் நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வேகமாக வந்த கார் ஒன்று, நாய்கள் மீது மோதியது.

இந்த விபத்தில் ஆஸ்டின் அழைத்து சென்ற இரண்டு நாய்களும் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இதனை தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக ஆஸ்டின் ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அவரது புகாரின் பேரில் காரை ஓட்டி வந்த ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவர் மீது ஐ.பி.சி 429/பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பிரிவு வழக்குகளுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

செல்லமாக வளர்த்த இரண்டு நாய்கள் விபத்தில் பலியான சம்பவத்தால் ஆஸ்டின் குடும்பத்தார் சோகத்தில் மூழ்கி இருக்கின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...