கோவையில் கார் மோதியதில் 2 நாய்கள் உயிரிழந்த சோகம் - ஓட்டுனர் மீது போலீசார் வழக்குப்பதிவு

ரத்தினபுரி அருகே ஆஸ்டின் என்பவர் தனது 2 நாய் குட்டிகளுடன் நடந்து சென்றபோது வேகமாக வந்த கார் மோதியதில், 2 நாய்களும் உயிரிழந்த நிலையில், ஓட்டுனர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் சேரன் மாநகர் பகுதியை சேர்ந்தவர் ஆஸ்டின். செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட இவர் தனது வீட்டில் நாய்கள் உள்ளிட்ட பல்வேறு செல்லப்பிராணிகளை ஆசையாக வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில், கோவை ரத்தினபுரி பகுதியில் தனது 2 நாய் குட்டிகளுடன் ஆஸ்டின் நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வேகமாக வந்த கார் ஒன்று, நாய்கள் மீது மோதியது.

இந்த விபத்தில் ஆஸ்டின் அழைத்து சென்ற இரண்டு நாய்களும் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இதனை தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக ஆஸ்டின் ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அவரது புகாரின் பேரில் காரை ஓட்டி வந்த ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவர் மீது ஐ.பி.சி 429/பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பிரிவு வழக்குகளுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

செல்லமாக வளர்த்த இரண்டு நாய்கள் விபத்தில் பலியான சம்பவத்தால் ஆஸ்டின் குடும்பத்தார் சோகத்தில் மூழ்கி இருக்கின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...