ஆன்லைன் ரம்மி விவகாரம்: ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக்கோரி கோவை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பிரதமருக்கு கடிதம்..!

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் தராத தமிழக ஆளுநரை திரும்ப பெறக்கோரி பிரதமருக்கு கடிதம் அனுப்ப வந்த கோவை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், தபால் நிலையம் முன்பு கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டின் மூலம் தற்பொழுது தொடர் தற்கொலைகள் நடைபெற்று வருகின்றன. கோவை மாவட்டத்திலும் கடந்த வாரம் ஒரு இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

எனவே இந்த விளையாட்டை தடை செய்ய கோரி பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர்ந்து கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களும் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்கு தடை விதிக்க ஆளுநர் கையெழுத்திடவில்லை என தமிழக அரசு சார்பில் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தான் பொறுப்பு எனக் கூறி, அவரை திரும்ப பெற வலியுறுத்தி கோவை மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் (DYFI) பிரதமருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.



மேலும், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தபால் நிலையத்தில் கடிதம் அனுப்ப வந்த DYFI அமைப்பினர் மாவட்ட செயலாளர் அர்ஜுன் தலைமையில் ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி கண்டனம் முழக்கங்களை எழுப்பியவாறு வந்தடைந்தனர்.



மேலும் தபால் நிலையம் முன்பும் கண்டன முழக்கங்களை எழுப்பியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. இதில் SFI அமைப்பினர் சிலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...