கோவையில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் ஆதரவற்றோர் தங்கும் விடுதிக்கான பூமி பூஜை - மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா தொடங்கி வைத்தார்

கோவை கடலைகாரசந்து பகுதியில் மாநகராட்சி சார்பில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைய உள்ள ஆதரவற்றோர் தங்கும் விடுதிக்கான பூமி பூஜையை மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா தொடங்கி வைத்தார்.



கோவை: கோவை கடலைகாரசந்து பகுதியில் புதிதாக அமைய உள்ள ஆதரவற்றோர் தங்கும் விடுதி கட்டிடத்திற்கான பூமி பூஜையை மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா முன்னிலையில் நடைபெற்றது.

மத்திய அரசின் "தீன்தயால் அந்தயோத்திய யோஜனா" தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சி பகுதிகளில் சுற்றித் திரியும் ஆதரவற்றோருக்கான தங்கும் விடுதி கட்ட திட்ட மதிப்பீடு மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டது.

இந்நிலையில் கோவை மாநகராட்சியின் 83 ஆவது வார்டுக்கு உட்பட்ட கடலைகாரர் சந்து பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சுமார் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் ஆதரவற்றோர் தங்கும் விடுதி அமைப்பதற்கான கட்டுமான பணிகள் இன்று பூமி பூஜையுடன் துவங்கியது.

மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, சுகாதாரத்துறை குழு தலைவர் மாரிச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...