கோவையில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் ஆதரவற்றோர் தங்கும் விடுதிக்கான பூமி பூஜை - மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா தொடங்கி வைத்தார்

கோவை கடலைகாரசந்து பகுதியில் மாநகராட்சி சார்பில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைய உள்ள ஆதரவற்றோர் தங்கும் விடுதிக்கான பூமி பூஜையை மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா தொடங்கி வைத்தார்.



கோவை: கோவை கடலைகாரசந்து பகுதியில் புதிதாக அமைய உள்ள ஆதரவற்றோர் தங்கும் விடுதி கட்டிடத்திற்கான பூமி பூஜையை மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா முன்னிலையில் நடைபெற்றது.

மத்திய அரசின் "தீன்தயால் அந்தயோத்திய யோஜனா" தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சி பகுதிகளில் சுற்றித் திரியும் ஆதரவற்றோருக்கான தங்கும் விடுதி கட்ட திட்ட மதிப்பீடு மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டது.

இந்நிலையில் கோவை மாநகராட்சியின் 83 ஆவது வார்டுக்கு உட்பட்ட கடலைகாரர் சந்து பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சுமார் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் ஆதரவற்றோர் தங்கும் விடுதி அமைப்பதற்கான கட்டுமான பணிகள் இன்று பூமி பூஜையுடன் துவங்கியது.

மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, சுகாதாரத்துறை குழு தலைவர் மாரிச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...