கோவையில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் ஆதரவற்றோர் தங்கும் விடுதிக்கான பூமி பூஜை - மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா தொடங்கி வைத்தார்

கோவை கடலைகாரசந்து பகுதியில் மாநகராட்சி சார்பில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைய உள்ள ஆதரவற்றோர் தங்கும் விடுதிக்கான பூமி பூஜையை மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா தொடங்கி வைத்தார்.



கோவை: கோவை கடலைகாரசந்து பகுதியில் புதிதாக அமைய உள்ள ஆதரவற்றோர் தங்கும் விடுதி கட்டிடத்திற்கான பூமி பூஜையை மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா முன்னிலையில் நடைபெற்றது.

மத்திய அரசின் "தீன்தயால் அந்தயோத்திய யோஜனா" தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சி பகுதிகளில் சுற்றித் திரியும் ஆதரவற்றோருக்கான தங்கும் விடுதி கட்ட திட்ட மதிப்பீடு மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டது.

இந்நிலையில் கோவை மாநகராட்சியின் 83 ஆவது வார்டுக்கு உட்பட்ட கடலைகாரர் சந்து பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சுமார் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் ஆதரவற்றோர் தங்கும் விடுதி அமைப்பதற்கான கட்டுமான பணிகள் இன்று பூமி பூஜையுடன் துவங்கியது.

மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, சுகாதாரத்துறை குழு தலைவர் மாரிச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...