கோவை தொண்டாமுத்தூரில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர் - 120 குடும்பத்தினர் சமுதாய நலக்கூடத்தில் தங்க வைப்பு

தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதியில் நேற்று பெய்த கனமழை காரணமாக அட்டுக்கல் பகுதியில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால், அங்கிருந்த பொதுமக்கள் பாதுகாப்பாக சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


கோவை: தமிழகம் முழுவதும் இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்ய உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் மற்றும் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதனால் அட்டுக்கல் பகுதியில் மலையில் இருந்து வடியும் நீர் வெள்ளப்பெருக்காக மாறி அப்பகுதியில் உள்ள புத்தூர், புது காலனி குடியிருப்புக்குள் நீர் புகுந்ததால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.



மேலும், அடுத்தடுத்து வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் அங்கிருந்த சுமார் 120 குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அருகே உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து அங்கு அவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.



இந்நிலையில் வெள்ள நீர் புகுந்த குடியிருப்புக்குள் இருக்கும் மழை நீரை, தொண்டாமுத்தூர் பேரூராட்சி ஊழியர்கள் மோட்டார்கள் மற்றும் லாரிகள் மூலம் அகற்றி வருகின்றனர்.



மேலும் சேரும், சகதியுமாக உள்ள பகுதிகளை தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...