கோவை தொண்டாமுத்தூரில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர் - 120 குடும்பத்தினர் சமுதாய நலக்கூடத்தில் தங்க வைப்பு

தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதியில் நேற்று பெய்த கனமழை காரணமாக அட்டுக்கல் பகுதியில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால், அங்கிருந்த பொதுமக்கள் பாதுகாப்பாக சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


கோவை: தமிழகம் முழுவதும் இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்ய உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் மற்றும் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதனால் அட்டுக்கல் பகுதியில் மலையில் இருந்து வடியும் நீர் வெள்ளப்பெருக்காக மாறி அப்பகுதியில் உள்ள புத்தூர், புது காலனி குடியிருப்புக்குள் நீர் புகுந்ததால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.



மேலும், அடுத்தடுத்து வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் அங்கிருந்த சுமார் 120 குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அருகே உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து அங்கு அவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.



இந்நிலையில் வெள்ள நீர் புகுந்த குடியிருப்புக்குள் இருக்கும் மழை நீரை, தொண்டாமுத்தூர் பேரூராட்சி ஊழியர்கள் மோட்டார்கள் மற்றும் லாரிகள் மூலம் அகற்றி வருகின்றனர்.



மேலும் சேரும், சகதியுமாக உள்ள பகுதிகளை தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...

ஆதவ் அர்ஜுனாவை நீக்க வேண்டும்: கோவையில் கிருஷ்ணசாமி

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் குடும்பத்தினர் மீதா...

தங்க விலை உயர்வு: வரிச்சட்ட மாற்றம் கோரி கோவை நகை உற்பத்தியாளர்கள்

தங்க விலை உயர்வால் மூலதன நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த கோயம்புத்தூர் நகை உற்பத்தியாளர் சங்கம், வரிச்சட்ட மாற்றங்கள்...

பேரூர் டி.எஸ்.பி நடப்பயண ரோந்து; பொதுமக்களிடம் குறைகள் கேட்பு

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பேரூர் டி.எஸ்.பி கால்நடை ரோந்து மேற்கொண்டு பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்...

கூடலூரில் அரசு பள்ளிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ சுனில் ஆனந்த்

கூடலூர் நகராட்சிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட மேட்டுப்பாளையம் எம்எல்ஏ சுனில் ஆனந்த், பழுதடைந்த குடிநீர் தொட...