கோவை தொண்டாமுத்தூரில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர் - 120 குடும்பத்தினர் சமுதாய நலக்கூடத்தில் தங்க வைப்பு

தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதியில் நேற்று பெய்த கனமழை காரணமாக அட்டுக்கல் பகுதியில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால், அங்கிருந்த பொதுமக்கள் பாதுகாப்பாக சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


கோவை: தமிழகம் முழுவதும் இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்ய உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் மற்றும் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதனால் அட்டுக்கல் பகுதியில் மலையில் இருந்து வடியும் நீர் வெள்ளப்பெருக்காக மாறி அப்பகுதியில் உள்ள புத்தூர், புது காலனி குடியிருப்புக்குள் நீர் புகுந்ததால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.



மேலும், அடுத்தடுத்து வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் அங்கிருந்த சுமார் 120 குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அருகே உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து அங்கு அவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.



இந்நிலையில் வெள்ள நீர் புகுந்த குடியிருப்புக்குள் இருக்கும் மழை நீரை, தொண்டாமுத்தூர் பேரூராட்சி ஊழியர்கள் மோட்டார்கள் மற்றும் லாரிகள் மூலம் அகற்றி வருகின்றனர்.



மேலும் சேரும், சகதியுமாக உள்ள பகுதிகளை தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்து வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...