கோவையில் பாரதியார் நினைவு நூற்றாண்டு நூல்கள் மற்றும் இசைப்பேழை வெளியீடு

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழாவில், பாரதியார் பாடல்களின் இசைப்பேழை மற்றும் பாரதியார் நினைவு நூற்றாண்டு நூல்களை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டார்.


கோவை: இன்று கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழாவில், பாரதியார் பாடல்களின் இசைப்பேழை மற்றும் பாரதியார் நினைவு நூற்றாண்டு நூல்களை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டார்.



பின்னர், இது தொடர்பாக நடைபெற்ற கலை இலக்கிய போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு இளம் பாரதி விருதினை வழங்கி பாராட்டினார்.



இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், பாரதியாரின் பிறந்தநாளான டிசம்பர் 11ம் தேதியை தேசிய மொழிகளின் தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பாரதியாரை பெருமைப்படுத்தும் வகையில், கடந்த ஆண்டு அவரது பிறந்தநாளான்று 14 அறிவிப்புகளை வெளியிட்டது.

வாரணாசியில் பாரதியார் தங்கிய இடத்தில் புகைப்படங்களுடன் கூடிய அருங்காட்சியத்தை நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார். பாரதியாரின் பாடல்கள் இங்கு மட்டுமல்ல உலகெங்கிலும் ஒலிக்க வேண்டும். மகாகவி பாரதியாரின் நவீன நாடகமான பாஞ்சாலி சபதம் நாடகத்தின் தொகுப்பு மற்றும் பாரதியாரின் பாடல்கள் இசைப்பேழை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

நல்லதை எண்ண வேண்டும். தெளிந்த நல்ல அறிவு வேண்டும் போன்ற கருத்துக்களை தன் பாடல்கள் மூலம் பாரதியார் முன் வைத்துள்ளார். அதேபோல, பெண் உரிமை, சாதி ஒழிப்பு உள்ளிட்டவைகள் குறித்து பல்வேறு கவிதைகள் எழுதியுள்ளார்.

பன்முக ஆளுமை கொண்ட பாரதியார், இந்தியாவில் உள்ள 20 மொழிகளில் பேசவும், எழுதவும் கூடிய திறமை கொண்டிருந்தார். ஆகேவே, இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் பாரதியாரின் கவிதைகளை மொழி பெயர்ப்பு செய்யும் முயற்சி நடைபெற்று வருகின்றது, இவ்வாறு ஆட்சியர் பேசினார்.



இந்நிகழ்ச்சியில், பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர், பொறுப்புக் குழு உறுப்பினர்கள் டாக்டர் வாசுகி, முனைவர் லவ்லினா, தமிழ் துறை தலைவர் முனைவர் சி.சித்ரா உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...