ஈஷா சார்பில் 5,000 சிறை கைதிகளுக்கு மன அழுத்தத்தை குறைக்க உதவும் வகையில் சிறப்பு யோகா வகுப்பு

தமிழகம் முழுவதும் சிறைகளில் ஈஷா யோகா மையம் சார்பில் கடந்த 3 மாதத்தில் சுமார் 5,000 கைதிகளுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் யோகா பயிற்சிகள் வழங்கி, நல்வழி படுத்தியதாக ஈஷா அமைப்பு அறிக்கை.


கோவை: ஈஷா யோகா மையத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் சிறையில் உள்ள கைதிகளின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் கடந்த 3 மாதத்தில் 5,000 கைதிகளுக்கு யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஈஷா சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், சிறை கைதிகளின் உடல் மற்றும் மன நலனை மேம்படுத்தும் நோக்கில் கடந்த 3 மாதங்களில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 5,000 சிறை கைதிகளுக்கு ஈஷா சார்பில் சிறப்பு யோகா வகுப்புகள் நடத்தப்பட்டன.



சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர், கடலூர் உட்பட தமிழ்நாட்டின் அனைத்து மத்திய, மாவட்ட சிறைகள் மற்றும் கிளை சிறைகளில் (Sub jails) இவ்வகுப்புகள் நடத்தப்பட்டன. ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவிடம் பயிற்சி பெற்ற யோகா ஆசிரியர்கள் சிறைகளுக்கு நேரில் சென்று ‘உயிர் நோக்கம்’, ‘சூரிய சக்தி’, ‘உப யோகா’ ஆகிய யோகா பயிற்சிகளை கற்றுக் கொடுத்தனர்.



இப்பயிற்சிகளை சிறை கைதிகள் தினமும் செய்து வருவதன் மூலம் மன அழுத்தப் பாதிப்பில் இருந்து விடுபட முடியும். மேலும், முதுகுத்தண்டு வலுப்பெறும், மூட்டு வலியில் இருந்து விடுதலை பெறலாம். உடல் ஆரோக்கியம் மேம்படும். இவ்வகுப்புகள் பல சிறை கைதிகளின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக, சிறைகளில் வகுப்பு எடுத்த ஈஷா யோகா ஆசிரியர்கள் கூறியதாவது, கடலூர் சிறையில் யோகா வகுப்பு நடத்தும் போது 19, 20 வயது மிக்க இளைஞர்கள் சிலர் விருப்பமின்றி முதல் நாள் வகுப்பில் கலந்து கொண்டனர். ஆனால், 3-வது நாள் வகுப்பு முடித்த பிறகு அதற்கு முற்றிலும் நேர் எதிராக தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.



இது போன்ற யோகா வகுப்பில் நாங்கள் முன்பே கலந்து கொண்டு இருந்தால் இப்படி சிறைக்கு வந்திருக்க மாட்டோம். பரவாயில்லை. இப்போதாவது இந்த வாய்ப்பு எங்களுக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி. நாங்கள் வெளியில் சென்ற பிறகு மீண்டும் எவ்வித குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருப்பது இந்த வகுப்பு எங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என கூறியுள்ளனர்.

அதேபோல் மற்றொரு கைதி ஒருவர் தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் போது, ன் பெயிலுக்கு விண்ணப்பித்து இருந்தேன். எல்லா நாட்களும் எப்போது பெயில் கிடைக்கும் என்று ஏங்கி கொண்டு இருந்த நான், முதல் நாள் வகுப்பு முடித்த பிறகு இவ்வகுப்பு முடிவதற்கு முன் பெயில் கிடைத்து விடக்கூடாது என கடவுளிடம் வேண்டி கொண்டேன்.

ஏனென்றால், நான் வெளியில் இருந்து இருந்தால் இதுபோன்ற வகுப்பில் கட்டாயம் கலந்து கொண்டு இருக்க மாட்டேன். நான் வேண்டி கொண்டபடியே பெயில் கிடைக்கவில்லை. 3 நாள் வகுப்பை நான் முழுமையாக நிறைவு செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என கூறியுள்ளார்.

இவ்வாறு யோகா ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

1992-ம் ஆண்டு முதல் சுமார் 30 வருடங்களாக இதுபோன்ற சிறை வகுப்புகளை ஈஷா நடத்தி வருகிறது. இதுவரை சுமார் 40,000 சிறை கைதிகள் இவ்வகுப்புகளால் பயன்பெற்றுள்ளனர்.

இவ்வாறு ஈஷா யோகா மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...