மருதமலை கோவில் ராஜகோபுர படிக்கட்டில் உருட்டி விடப்பட்ட பழைய பொருட்கள் - கோவில் நிர்வாகம் விளக்கம்

ராஜகோபுரம் படிக்கட்டில் இருந்து பழைய பொருட்களை உருட்டி விடும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, கோவில் பொருட்களை எதற்காக இப்படி அப்புறப்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.



கோவை: கோவை மருதமலை கோவில் தூய்மை பணியின் போது ராஜகோபுரம் படிக்கட்டில் இருந்து பழைய பொருட்களை உருட்டி விட்ட விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பக்தர்கள் கோவிலுக்கு அன்பளிப்பாக கொடுத்த பொருட்களை இப்படி அஜாக்கிரதையாக அப்புறப்படுத்துவதா என பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில், சம்பவம் குறித்து கோவில் நிர்வாகத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.

கோவையில் பிரசித்திபெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ராஜகோபுரம் படிக்கட்டில் உள்ள அறையில் இருந்து, பழைய பொருட்களை அகற்றி சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அப்போது, சிவப்பு கம்பளம், சாக்குப்பை மற்றும் சில பழைய பொருட்களை, படிக்கட்டில் இருந்து பணியாளர்கள் தூக்கி வீசி, அங்கிருந்து கீழே எடுத்து செல்வது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகியது.

அந்த வீடியோவை பக்தர் ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூக வலை தளங்களில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலான நிலையில், எதற்காக இப்படி கோவில் பொருட்களை படிக்கட்டில் இருந்து கீழே உருட்ட வேண்டும் என்று பக்தர்கள் கேள்வி எழுப்பினர்.

இது குறித்து, மருதமலை கோவில் நிர்வாகத்தினர் கூறும் போது: கோவிலில் உள்ள பழைய பொருட்களை அகற்றி சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. தேங்கியுள்ள பழைய பொருட்களில் கொசுக்கள் மற்றும் பூச்சிகள் உற்பத்தியாவதால் அவை அப்புறப்படுத்தி சுத்தம் செய்யப்பட்டது.

அப்போது, கனமான பொருட்கள் அனைத்தும் படிக்கட்டில் இறங்கி எடுத்து செல்லப்பட்டது. சுமார், 15 முறைக்கு மேல் படிக்கட்டில், மேலும் கீழும் நடந்து சென்று இறக்கி வைத்துள்ளனர். இந்நிலையில், சாக்கு, துணி போன்ற பழைய பொருட்கள் மட்டும் படிக்கட்டில் இருந்து உருட்டி விடப்பட்டது.

என்ன நடந்தது என்பதை முழுமையாக வீடியோ எடுக்காமல், அனைத்து பொருட்களையும் தூக்கி வீசியதாக தவறான முறையில் தகவலை பரப்பியுள்ளனர்" என்று தெரிவித்துள்ளனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...