மருதமலை கோவில் ராஜகோபுர படிக்கட்டில் உருட்டி விடப்பட்ட பழைய பொருட்கள் - கோவில் நிர்வாகம் விளக்கம்

ராஜகோபுரம் படிக்கட்டில் இருந்து பழைய பொருட்களை உருட்டி விடும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, கோவில் பொருட்களை எதற்காக இப்படி அப்புறப்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.



கோவை: கோவை மருதமலை கோவில் தூய்மை பணியின் போது ராஜகோபுரம் படிக்கட்டில் இருந்து பழைய பொருட்களை உருட்டி விட்ட விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பக்தர்கள் கோவிலுக்கு அன்பளிப்பாக கொடுத்த பொருட்களை இப்படி அஜாக்கிரதையாக அப்புறப்படுத்துவதா என பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில், சம்பவம் குறித்து கோவில் நிர்வாகத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.

கோவையில் பிரசித்திபெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ராஜகோபுரம் படிக்கட்டில் உள்ள அறையில் இருந்து, பழைய பொருட்களை அகற்றி சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அப்போது, சிவப்பு கம்பளம், சாக்குப்பை மற்றும் சில பழைய பொருட்களை, படிக்கட்டில் இருந்து பணியாளர்கள் தூக்கி வீசி, அங்கிருந்து கீழே எடுத்து செல்வது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகியது.

அந்த வீடியோவை பக்தர் ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூக வலை தளங்களில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலான நிலையில், எதற்காக இப்படி கோவில் பொருட்களை படிக்கட்டில் இருந்து கீழே உருட்ட வேண்டும் என்று பக்தர்கள் கேள்வி எழுப்பினர்.

இது குறித்து, மருதமலை கோவில் நிர்வாகத்தினர் கூறும் போது: கோவிலில் உள்ள பழைய பொருட்களை அகற்றி சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. தேங்கியுள்ள பழைய பொருட்களில் கொசுக்கள் மற்றும் பூச்சிகள் உற்பத்தியாவதால் அவை அப்புறப்படுத்தி சுத்தம் செய்யப்பட்டது.

அப்போது, கனமான பொருட்கள் அனைத்தும் படிக்கட்டில் இறங்கி எடுத்து செல்லப்பட்டது. சுமார், 15 முறைக்கு மேல் படிக்கட்டில், மேலும் கீழும் நடந்து சென்று இறக்கி வைத்துள்ளனர். இந்நிலையில், சாக்கு, துணி போன்ற பழைய பொருட்கள் மட்டும் படிக்கட்டில் இருந்து உருட்டி விடப்பட்டது.

என்ன நடந்தது என்பதை முழுமையாக வீடியோ எடுக்காமல், அனைத்து பொருட்களையும் தூக்கி வீசியதாக தவறான முறையில் தகவலை பரப்பியுள்ளனர்" என்று தெரிவித்துள்ளனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...