மாண்டஸ் புயல் எதிரொலி: உதகையில் மழை - கடும் குளிரால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

உதகை, கோத்தகிரி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதல் கடும் பனி மூட்டம் மற்றும் மழையும் பெய்து வருவதால் கடும் குளிர் நிலவுகிறது. இதனால், படகு நிலையம், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடியது.



நீலகிரி: வங்க கடலில் தென்கிழக்கில் மையம் கொண்டிருக்கும் மாண்டஸ் புயல், இன்று நள்ளிரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என கூறப்பட்ட நிலையில் நாளை அதிகாலைதான் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னைக்கு தென்கிழக்கே 270 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயலால், வட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

கடலோர மாவட்டங்கள் அல்லாது சேலம், திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் இன்னும் இரண்டு நாட்களுக்கு மிதமான முதல் கனமான மழை வரை பெய்யக்கூடும் என்று தெரிவித்திருந்தது..

அதன்படி, மாண்டஸ் புயல் தமிழகத்தை நெறுங்கி வரும் நிலையில் நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்ய தொடங்கி உள்ளது.



உதகை, கோத்தகிரி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதல் கடும் பனி மூட்டம் சூழ்ந்துள்ளதுடன் மழையும் பெய்து வருகிறது. எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு கடும் பனிமூட்டம் இருப்பதுடன் மழை பெய்து வருவதால் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கபட்டுள்ளது.



மழையின் தாக்கம் காரணமாக உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதனால், முக்கிய சுற்றுலா தளங்களான தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா, படகு இல்லம் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களும் வெறிச்சோடி காணப்பட்டன.

மழையின் தாக்கம் மதியத்திற்கு மேல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் பாதுகப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

பொதுவாகவே டிசம்பர் மாதத்தில் நீலகிரி மாவட்டத்தில் கடும் குளிர் இருக்கும், தற்போது புயல் காரணமாக மழை பெய்ய தொடங்கியுள்ளதால் வெளியே வர முடியாத அளவிற்கு கடும் குளிர் நிலவி வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

Newsletter

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...

கோவில்மேட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மா...

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...