வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.15 லட்சம் கடன் உதவி வழங்கிய கோவை ஆட்சியர்..!

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் புதிய தொழில்களை துவங்க 5 பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய தலா ரூ.15 லட்சம் கடன் உதவியை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வழங்கினார்.


கோவை: கிராமப்புற சமூகங்களின் நிலைத்தன்மை மற்றும் செழிப்பை உருவாக்குவதன் மூலம் கிராமப்புற நிறுவன மேம்பாடு நிதி மற்றும் வேலை வாய்ப்புக்கான மாற்றத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு "வாழ்ந்து காட்டுவோம்" என்ற திட்டம் உருவாக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் காரமடை, பெரியநாயக்கன்பாளையம், அன்னூர், சர்க்கார் சாமக்குளம் ஆகிய 4 வட்டாரங்களில் உள்ள 54 கிராம ஊராட்சிகளில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.



இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ், சர்க்கார் சாமக்குளம் வட்டாரத்தை சேர்ந்த 5 பயனாளிகளுக்கு தொழில்களை மேம்படுத்துவதற்காகவும், புதிய தொழில்களை தொடங்கவும் தலா ரூ.15 லட்சம் வங்கி கடன் உதவியை ஆட்சியர் சமீரன் வழங்கினார்.

இதில், ரூ.15 லட்சம் கடன் உதவியில், ரூ.4.50 லட்சம் மானியம் - அதாவது கடன் உதவியில் 30 சதவீதத்தை அரசு மானியமாக வழங்குகிறது. கடனாக வாங்கிய தொகையில் ரூ.10.50 லட்சத்தை பயனாளிகள் திரும்ப செலுத்தினால் மட்டும் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...