கோவை கார் வெடிப்பு வழக்கில் மேலும் 3 பேர் கைது - என்.ஐ.ஏ அதிகாரிகள் நடவடிக்கை

தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் குன்னூரை சேர்ந்த உமர் பாரூக், கோவையை சேர்ந்த தவ்ஃபிக், பெரோஸ் கான் ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர்.


கோவை: கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி, கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் மாநகர போலீசாருடன் இணைந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய ஜமீஷா முபீனுடன் தொடர்பில் இருந்தவர்களின் வீடுகளில் சோதனை மேற்கொண்டு வந்தனர்.

இந்த சோதனையில், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் குன்னூரை சேர்ந்த உமர் பரூக் (39), கோவையை சேர்ந்த தவுபிக்(25) மற்றும் பெரோஸ் கான் (28) ஆகிய மூன்று பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கோவை கார் வெடிப்பு வழக்கில், உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா, முகமது அசாருதின், கோவை ஜி.எம் நகர் பகுதியை சேர்ந்த முகமது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் மற்றும் அப்சர் என ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 பேரை என்.ஐ.ஏ கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...