கோவையில் ஈஷா சார்பில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம் - 600க்கும்‌ மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்

ஈஷாவின் 'ஆரோக்கிய அலை' அமைப்பின் சார்பில் கோவையில் கடந்த டிச.4-ல் மத்வராயபுரத்திலும், டிச.5 ஆம் தேதி ஆலாந்துறையில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்களில் பழங்குடி மக்கள் உட்பட சுமார் 600 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


கோவை: கிராமப்புற ஏழை மக்களுக்கு தரமான மருத்துவ சேவை அளிக்கும்‌ நோக்கத்தில்‌, ஈஷா அமைப்பின் “கிராமப்‌ புத்துணர்வு” இயக்கத்தின்‌ “ஆரோக்கிய அலை” அமைப்பானது, முன்னணி மருத்துவமனைகளுடன்‌ இணைந்து கோவை மாவட்டத்தில்‌ பல்வேறு விதமான இலவச மருத்துவ முகாம்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.



அதன்‌ ஒரு பகுதியாக, கடந்த டிசம்பர்‌ 4-ம்‌ தேதி மத்வராயபுரத்தில்‌ உள்ள அரசு மேல்நிலைப்‌ பள்ளியிலும்‌, டிசம்பர்‌ 5-ம்‌ தேதி ஆலாந்துறையில்‌ உள்ள ஈஷா கிராம மருத்துவமனையிலும்‌ பல்துறை இலவச மருத்துவ முகாம்‌ நடைபெற்றது.



இதில்‌ ஆலாந்துறை, செம்மேடு, இருட்டுப்பள்ளம்‌, மடக்காடு, தொண்டாமுத்தூர்‌, பூலுவப்பட்டி, தொம்பிலிபாளையம்‌ உட்பட பல்வேறு கிராமங்களைச்‌ சேர்ந்த பொதுமக்கள்‌ பங்கேற்று இலவச மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்‌.

இதில், இருதயம்‌, கண்‌, காது, மூக்கு, தொண்டை, எலும்பு, தோல்‌, பல்‌, நரம்பு, பெண்கள்‌ மற்றும்‌ குழந்தைகள்‌ நல மருத்துவம்‌ என ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும்‌ சிறப்பு மருத்துவர்கள்‌ பங்கேற்று மருத்துவ ஆலோசனைகளை‌ வழங்கினர்‌.

குறிப்பாக, கண்‌ புரை பாதிப்பு கண்டறியப்பட்ட 43 நோயாளிகளுக்கு அரவிந்த்‌ கண்‌ மருத்துவமனையில்‌ கண்‌ புரை நீக்க அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டது.

மேலும்‌, முகாமின்‌ சிறப்பம்சமாக, இருதய நோயாளிகளுக்கு எக்கோ பரிசோதனை, மகளிருக்கான கர்ப்பப்பை பரிசோதனை, மார்பக புற்றுநோய்‌ கண்டறியும்‌ பரிசோதனை, காது கேட்கும்‌ திறனுக்கான பரிசோதனைகளை பொதுமக்கள்‌ இலவசமாக செய்து கொண்டனர்‌. இதுதவிர அனைத்து மருந்துகளும்‌ இலவசமாக வழங்கப்பட்டன.

இந்த 2 நாள்‌ மருத்துவ முகாமானது,‌ கோவை அரவிந்த்‌ கண்‌ மருத்துவமனை, வெள்ளியங்கிரி உழவன்‌ உற்பத்தியாளர்‌ நிறுவனம்‌, கங்கா மருத்துவமனை, கோவை ரோட்டரி மெட்ரோபொலிஸ்‌ சங்கம்‌ ஆகிய அமைப்புகளுடன்‌ இணைந்து நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...