கோவை கவுண்டம்பாளையம் அருகே சேவல் சண்டை சூதாட்டம் - 8 பேரை கைது செய்த போலீசார்..!

கவுண்டம்பாளையம் அருகே சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.10,700 பணம் மற்றும் 2 கட்டு சேவல்களை பறிமுதல் செய்த நிலையில், 8 பேரையும் ஜாமீனில் விடுவித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அருகேயுள்ள மாரியம்மன் கோவில் வீதி பகுதியில் சிலர் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபடுவதாக துடியலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து துடியலூர் காவல் ஆய்வாளர் ஞானசேகரன், உதவி ஆய்வாளர் குருசந்திர வடிவேல் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் பணம் வைத்து சேவல் சண்டை நடைபெறுவது தெரியவந்தது.

இதனையடுத்து சேவல் சண்டையில் ஈடுபட்டு வந்த வடவள்ளியைச் சேர்ந்த சிவானந்தன், மணிகண்டன், செந்தில்குமார், பாபு, ரத்தினபுரியைச் சேர்ந்த கனகராஜ், கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த ராஜா, செல்வக்குமார் மற்றும் நரசிம்மநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த பிரவீன் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 10,700 ரூபாய் பணம் மற்றும் 2 கட்டு சேவல்களை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட 8 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...