கோவை பாலத்துறையில் டிப்பர் லாரி மோதியதில் சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்த பள்ளிச் சிறுமி படுகாயம்..!

பாலத்துறையில் சாலை அருகே விளையாடிக்கொண்டிருந்த பள்ளிச் சிறுமியின் டிப்பர் லாரி ஏறியதில் காலில் காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், லாரி ஓட்டுனர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் பாலத்துறை அடுத்த கருஞ்சாமி கவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். கூலித்தொழிலாளியான இவரது மகள் கனிஷ்கா (12) பச்சாபாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் சிறுமி சக குழந்தைகளுடன் பாலத்துறை - பச்சாபாளையம் சாலை அருகே கில்லி விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது சாலை அருகே சென்ற குச்சியை எடுக்க கனிஷ்கா சென்றுள்ளார்.

அப்போது அவ்வழியாக சென்ற டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து சிறுமியின் இரண்டு கால் பாதத்தின் மீது ஏறி இறங்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த சிறுமியை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் மருத்துவர்கள் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே வேகமாக டிப்பர் லாரியை ஓட்டி வந்த கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த சுரேஷ் (35) என்பவர் மீது மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் மீது லாரி கட்டுப்பாட்டை இழந்து மோதிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...