கோவை எட்டிமடையில் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி தனியார் கல்லூரி ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம்..!

எட்டிமடை அருகே கடந்த 2ஆம் தேதி, சைக்கிள் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், பின் தலையில் அடிபட்டு சிகிச்சை பெற்று வந்த தனியார் கல்லூரி சமையல் ஊழியர் சுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.


கோவை: கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (56). இவர் எட்டிமடை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் சமையல் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (02.12.2022) அதே கல்லூரியில் ஓட்டுநராக பணியாற்றி வரும் அஜித்குமார் என்ற இளைஞருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது எட்டிமடை பொங்கேகவுண்டன்புதூர் அருகே வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், அதே கல்லூரியில் பணியாற்றும் சாய்தரன் என்ற இளைஞர் வந்த மிதிவண்டி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் மூவரும் கீழே விழுந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த சுப்பிரமணியனுக்கு பின் தலையில் பலத்த காயமடைந்து மயங்கியதாக தெரிகிறது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சுப்பிரமணியன் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக கே.ஜி.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...