நீலகிரி உதகை அருகே நள்ளிரவில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை சிறுத்தை - பொதுமக்கள் அச்சம்..!

உதகை அருகே உள்ள கல்லக்கொரை, பாலாடா, கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் வளர்ப்பு நாய்களை வேட்டையாட சுற்றித்திரியும் ஒற்றை சிறுத்தை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகே நள்ளிரவில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தையால் பொதுமக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக சிறுத்தைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

பகல் நேரங்களில் வனப்பகுதிக்குள் சென்று பதுங்கும் சிறுத்தைகள், நள்ளிரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்கு வந்து வளர்ப்பு நாய்களை வேட்டையாடி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன.



குறிப்பாக உதகை அருகே உள்ள கல்லக்கொரை, பாலாடா, கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி திரியும் ஒற்றை சிறுத்தை, கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து நள்ளிரவு நேரங்களில் வீடு, வீடாக சென்று வளர்ப்பு நாய்களை வேட்டையாட முயன்று வருவதாக கூறப்படுகிறது.



இதனால் அச்சமடைந்துள்ள கிராம மக்கள், சிறுத்தையை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்குமாறு வனத்துறையினருக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சிறுத்தை பிடிப்பதற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், வனத்துறையினர் அலட்சியமாக செயல்படுவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...