நீலகிரி உதகை அருகே நள்ளிரவில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை சிறுத்தை - பொதுமக்கள் அச்சம்..!

உதகை அருகே உள்ள கல்லக்கொரை, பாலாடா, கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் வளர்ப்பு நாய்களை வேட்டையாட சுற்றித்திரியும் ஒற்றை சிறுத்தை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகே நள்ளிரவில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தையால் பொதுமக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக சிறுத்தைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

பகல் நேரங்களில் வனப்பகுதிக்குள் சென்று பதுங்கும் சிறுத்தைகள், நள்ளிரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்கு வந்து வளர்ப்பு நாய்களை வேட்டையாடி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன.



குறிப்பாக உதகை அருகே உள்ள கல்லக்கொரை, பாலாடா, கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி திரியும் ஒற்றை சிறுத்தை, கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து நள்ளிரவு நேரங்களில் வீடு, வீடாக சென்று வளர்ப்பு நாய்களை வேட்டையாட முயன்று வருவதாக கூறப்படுகிறது.



இதனால் அச்சமடைந்துள்ள கிராம மக்கள், சிறுத்தையை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்குமாறு வனத்துறையினருக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சிறுத்தை பிடிப்பதற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், வனத்துறையினர் அலட்சியமாக செயல்படுவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Newsletter

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...