ராணுவ பயிற்சி விமானத்தில் 2 கி.மீ உயரத்தில் இருந்து பாராசூட் உதவியுடன் குதித்து உதகை அரசு கல்லூரி மாணவி சாகசம்..!

டெல்லியில் நடைபெற்ற என்சிசி பயிற்சியில் தமிழ்நாடு சார்பில் கலந்து கொண்டு சாகச பட்டியலில் இடம் பிடித்த உதகை அரசு கலைக் கல்லூரி மாணவி கோகிலவாணிக்கு மாணவர்கள், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.



நீலகிரி: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோகிலவாணி. இவர் நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள அரசு கல்லூரியில் இளங்கலை சுற்றுலாவியல் துறையில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார்.

இந்நிலையில் என்.சி.சி எனப்படும் தேசிய மாணவர் படையில் தீவிர நாட்டம் கொண்ட இவர், பல்வேறு பயிற்சிகளில் பங்கேற்று வருகிறார்.

இதனிடையே சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற தேசிய மாணவர் படை பாரா கேம்ப பயிற்சியில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் பங்கேற்றனர்.



அதில் தமிழ்நாடு சார்பாக கோகிலவாணி மட்டும் தேர்வாகி இந்தியா விமான படையின் பிரத்யேக விமானத்தில் பயணித்து 2 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து பாராசூட் உதவியுடன் குதித்து சாகசப் பட்டியலில் இடம் பிடித்தார்.

மாணவி கோகிலவாணியின் பாராசூட் சாகசம் குறித்து தேசிய மாணவர் படை அலுவலர்கள் கூறியதாவது, உதகை அரசு கலை கல்லூரி வரலாற்றிலேயே முதன்முறையாக மாணவி ஒருவர் பாரா கேம்ப் பயிற்சியில் பங்கேற்றிருக்கிறார். இந்த முறை தமிழகத்தில் இருந்து தேர்வான ஒரே பெண் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார்.

அதற்கான உடல் தேர்வில் கோகிலவாணி தேர்ச்சி பெற்றிருந்தார். கடுமையான பல கட்ட பயிற்சிக்குப் பின்னர் அவர், பாரா கேம்ப் பயிற்சிக்கு தேர்வானார்.

கர்னல் ஸ்ரீனிவாஸின் ஊக்கத்தால் என்.சி.சி மாணவிகளுடன் பாராசூட் சாகசத்தில் அவர் வெற்றிகரமாக ஈடுபட்டார்.

இவ்வாறு என்.சி.சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

சாகசத்தில் ஈடுபட்ட மாணவிக்கு, கல்லூரி பேராசியரியர்கள், மாணவர்கள் என பல்வேறு தர்ப்பினரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...