கோவையில் நடைபெற்று வரும் கிராம உதவியாளர் தேர்விற்கு 3,505 பேர் விண்ணப்பம் - 9 வட்டங்களில் தேர்வு நடைபெற்று வருகிறது…!

கோவை மாவட்டத்தில் பேரூர், மதுக்கரை, பொள்ளாச்சி உள்ளிட்ட 9 தாலுக்காவில் நடைபெறும் இந்த கிராம உதவியாளர் தேர்விற்கு 3,505 பேர் விண்ணபித்து தேர்வு எழுதி வருகின்றனர். வரும் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நேர்முக தேர்வு நடைபெற உள்ளது.


கோவை: தமிழகத்தில் உள்ள 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது.

வாசித்தல், எழுதுதல் என இரண்டு நிலையில் இந்த தேர்வானது நடைபெறும். அதன்படி, எதாவது ஒரு புத்தகத்தில் இருந்து ஏதாவது ஒரு பக்கத்தில் உள்ள வாசகங்களை விண்ணப்பதாரரை வாசிக்கச் சொல்லலாம். இதற்கு 10 மதிப்பெண் வழங்கப்படும். அதேபோல, ஏதேனும் தலைப்பு பற்றி 100 வார்த்தைக்கு மிகாமல் கட்டுரை எழுத வைக்கலாம். இதற்கு 30 மதிப்பெண் வழங்கப்படும்.

அதன்பின், நேர்காணல் தேர்வு, மூல சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் அதிகபட்ச மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.



கோவை மாவட்டத்தில் பேரூர், மதுக்கரை, பொள்ளாச்சி உள்ளிட்ட 9 தாலுக்காவில் நடைபெறும் இந்த கிராம உதவியாளர் தேர்விற்கு 3,505 பேர் விண்ணபித்து தேர்வு எழுதி வருகின்றனர். வரும் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நேர்முக தேர்வு நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட தேர்வாளர்கள் பட்டியல் மற்றும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளது.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...