குப்பையில்லா மாநகராட்சிக்கான சான்றுக்கு விண்ணப்பிக்கும் கோவை - பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்க மாநகராட்சி ஆணையர் அழைப்பு..!

குப்பையில்லா மாநகராட்சிக்கான 3 ஸ்டார் ரேட்டிங்குக்காக கோவை மாநகராட்சி விண்ணப்பிக்க உள்ள நிலையில் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை நேரடியாகவோ எழுத்துப் பூர்வமாகவோ மாநகராட்சி ஆணையரிடம் தெரிவிக்க அழைப்பு.



கோவை: கோவை மாநகராட்சி குப்பையில்லா மாநகராட்சிக்கான 3 ஸ்டார் ரேட்டிங்குக்காக விண்ணப்பிக்க உள்ள நிலையில், பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை நேரடியாகவோ எழுத்துப் பூர்வமாகவோ மாநகராட்சி ஆணையரிடம் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மத்திய நகாப்புற மற்றும்‌ வீட்டுவசதி அமைச்சகத்தின்‌ தூய்மை பாரத திட்டம்‌ 2.0-வின் மூலம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ்‌ ஓவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளுக்கும்‌ STAR RATING வழங்கப்பட்டு வருகிறது.

இதன்‌ ஒரு பகுதியாக கோவை‌ மாநகராட்சியில்‌ உள்ள 100 வார்டு பகுதிகளில்‌ சேகரிக்கப்படும்‌ திடக்கழிவுகளை, திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி முறையே தரம்‌ பிரித்து கையாளப்பட்டு வருகிறது.

எனவே கோவை மாநகராட்சியினை குப்பையில்லா மாநகராட்சியாக (Garbage Free City) மூன்று நட்சத்திர அங்கீகாரம்‌ (Three Star Rating) என சான்று பெறுவதற்கு விண்ணப்பிக்க உள்ளது.

பொதுமக்கள்‌ இதுகுறித்த தங்களின்‌ ஆட்சேபனைகள்‌ மற்றும் கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால்‌ 15 நாட்களுக்குள்‌ தெரிவிக்கலாம்.

அவ்வாறு தெரிவிக்க விரும்புபவர்கள், கோவை‌ மாநகராட்சி அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது எழுத்துப் பூர்வமாகவோ ஆலோசனைகள்‌ மற்றும்‌ ஆட்சேபனையை மாநகராட்சி ஆணையாளரிடம் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...