திறந்தவெளி மலம் கழித்தலற்ற மாநகராட்சி என்ற சான்றுக்கு விண்ணப்பிக்கவுள்ள கோவை மாநகராட்சி - மக்கள் கருத்துகளை தெரிவிக்க அழைப்பு..!

திறந்தவெளி மலம், சிறுநீர் கழித்தலற்ற மாநகராட்சி என்ற சான்றுக்கு கோவை மாநகராட்சி விண்ணப்பிக்க உள்ளதால், பொதுமக்கள் இதுகுறித்த கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளை 15 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என மாநகராட்சி ஆணையர் பிரதாப் அறிக்கை.



கோவை: கோவை மாநகராட்சி திறந்த வெளியில்‌ மலம்‌ கழித்தலற்ற மாநகராட்சி என சான்று பெறுவதற்கு விண்ணப்பிக்கப்பட உள்ளதால் மக்கள் தங்கள் ஆட்சேபனைகளை 15 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என மாநகராட்சி ஆணையர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, மத்திய நகர்ப்புற மற்றும்‌ வீட்டுவசதி அமைச்சகத்தின்‌ மூலம்‌ தூய்மை பாரத திட்டம்‌ 2.0-ன் கீழ்‌ கோவை மாநகராட்சியில்‌ உள்ள 100 வார்டுகளில்‌ திறந்த வெளியில்‌ மலம்‌ மற்றும்‌ சிறுநீர்‌ கழித்தல்‌ அற்ற மாநகராட்சி சான்று பெறுவதற்கான நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனைதொடர்ந்து கோவை மாநகராட்சியினை திறந்த வெளியில்‌ மலம்‌ கழித்தல்‌ அற்ற மாநகராட்சி என சான்று பெறுவதற்கு விண்ணப்பிக்கப்பட உள்ளது.

பொதுமக்கள்‌ இது குறித்த தங்களின்‌ ஆட்சேபனைகள்‌, கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால்‌ 15 நாட்களுக்குள்‌ கோவை மாநகராட்சி அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது எழுத்துப்பூர்வமாகவோ ஆலோசனைகள்‌ மற்றும்‌ ஆட்சேபனையை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Newsletter

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...