திறந்தவெளி மலம் கழித்தலற்ற மாநகராட்சி என்ற சான்றுக்கு விண்ணப்பிக்கவுள்ள கோவை மாநகராட்சி - மக்கள் கருத்துகளை தெரிவிக்க அழைப்பு..!

திறந்தவெளி மலம், சிறுநீர் கழித்தலற்ற மாநகராட்சி என்ற சான்றுக்கு கோவை மாநகராட்சி விண்ணப்பிக்க உள்ளதால், பொதுமக்கள் இதுகுறித்த கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளை 15 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என மாநகராட்சி ஆணையர் பிரதாப் அறிக்கை.



கோவை: கோவை மாநகராட்சி திறந்த வெளியில்‌ மலம்‌ கழித்தலற்ற மாநகராட்சி என சான்று பெறுவதற்கு விண்ணப்பிக்கப்பட உள்ளதால் மக்கள் தங்கள் ஆட்சேபனைகளை 15 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என மாநகராட்சி ஆணையர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, மத்திய நகர்ப்புற மற்றும்‌ வீட்டுவசதி அமைச்சகத்தின்‌ மூலம்‌ தூய்மை பாரத திட்டம்‌ 2.0-ன் கீழ்‌ கோவை மாநகராட்சியில்‌ உள்ள 100 வார்டுகளில்‌ திறந்த வெளியில்‌ மலம்‌ மற்றும்‌ சிறுநீர்‌ கழித்தல்‌ அற்ற மாநகராட்சி சான்று பெறுவதற்கான நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனைதொடர்ந்து கோவை மாநகராட்சியினை திறந்த வெளியில்‌ மலம்‌ கழித்தல்‌ அற்ற மாநகராட்சி என சான்று பெறுவதற்கு விண்ணப்பிக்கப்பட உள்ளது.

பொதுமக்கள்‌ இது குறித்த தங்களின்‌ ஆட்சேபனைகள்‌, கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால்‌ 15 நாட்களுக்குள்‌ கோவை மாநகராட்சி அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது எழுத்துப்பூர்வமாகவோ ஆலோசனைகள்‌ மற்றும்‌ ஆட்சேபனையை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...