கோவை அரசு மருத்துவமனை காவலாளிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் தன்னை தாக்கியதாக ஆட்சியர் அலுவலகத்தில் பெண் புகார்

காந்திமாநகர் ஹட்கோ காலனியை சேர்ந்த பெண் ஒருவர் கோவை அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு மருத்துவமனை காவலாளிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் அவரை வெளியே செல்லுமாறு தாக்கியதாக புகார் அளித்துள்ளார்.



கோவை: கோவை காந்திமாநகர் ஹட்கோ காலனி பகுதியைச் சேர்ந்தவர் கற்பகவல்லி. இவருடைய தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு கை, கால் வீக்கம் உட்பட பல்வேறு உடல் உபாதைகள் இருந்து வந்ததாக தெரிகிறது.

இதற்காக, இவர் கோவை அரசு மருத்துவமனையில் கடந்த ஒரு வருட காலமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும், இதய பிரச்சினை சம்பந்தமாகவும் மருத்துவமனைலேயே தங்கி சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்துள்ளார்.

இவ்வாறு அவ்வப்போது பல்வேறு உடல் உபாதைகள் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று வழக்கம் போல சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்த கற்பகவல்லி இரவு அங்கேயே தங்கி உள்ளார்.



அப்போது, இரவு நேரத்தில் பணியாற்றும் காவலாளிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஒன்று சேர்ந்து உடனடியாக மருத்துவமனையை விட்டு வெளியே செல்லுமாறு தன்னை வற்புறுத்தியதாக புகார் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் வெளியே செல்ல மறுப்பு தெரிவித்த போது, அங்கு பணியில் இருந்த காவலாளிகள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் தன்னை அடித்து ஆடைகளை கிழித்து உடைமைகளை வெளியே தூக்கி எறிந்து பிரச்சனை செய்ததாக அப்பெண் தனது புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.



பின்னர், தான் மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் முறையிட்ட போது, அவர்களும் தன்னை உடனடியாக மருத்துவமனையை விட்டு வெளியே செல்லுமாறு நிர்ப்பந்தித்ததாக கூறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

Newsletter

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...

கோவை வடக்கில் ராஜஸ்தான் முதல்வர் முன்னிலையில் வானதி சீனிவாசன் வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு தொகுதியில் BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா, அண்ணாமலை முன்னிலையில்...

சூலூர் தொகுதி: AIADMK வேட்பாளர் வி.பி.கந்தசாமி வேட்பு மனு தாக்கல்

சூலூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் வி.பி.கந்தசாமி கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புடைசூழ வேட்பு மனுவை தா...

தொண்டாமுத்தூரில் AIADMK வேலுமணி வேட்புமனு: அண்ணாமலை உடன் தாக்கல்

தொண்டாமுத்தூர் தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் S.P. வேலுமணி இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். BJP முன்னாள் மாந...

தொண்டாமுத்தூர்: N.R. கார்த்திகேயன் வேட்புமனு தாக்கல்

தொண்டாமுத்தூர் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் N.R. கார்த்திகேயன், பேரூர் தாலுக்கா அலுவலகத்தில் வேட...

மூலப்பொருள் விலை உயர்வால் 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் இயந்திர கட்டணம் உயர்த்த 'டாக்ட்', 'காட்மா' தொழில் அமைப்பினர் முடிவு

கோவையில் மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், Job Work நிறுவனங்கள் CNC,...