கோவை அரசு மருத்துவமனை காவலாளிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் தன்னை தாக்கியதாக ஆட்சியர் அலுவலகத்தில் பெண் புகார்

காந்திமாநகர் ஹட்கோ காலனியை சேர்ந்த பெண் ஒருவர் கோவை அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு மருத்துவமனை காவலாளிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் அவரை வெளியே செல்லுமாறு தாக்கியதாக புகார் அளித்துள்ளார்.



கோவை: கோவை காந்திமாநகர் ஹட்கோ காலனி பகுதியைச் சேர்ந்தவர் கற்பகவல்லி. இவருடைய தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு கை, கால் வீக்கம் உட்பட பல்வேறு உடல் உபாதைகள் இருந்து வந்ததாக தெரிகிறது.

இதற்காக, இவர் கோவை அரசு மருத்துவமனையில் கடந்த ஒரு வருட காலமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும், இதய பிரச்சினை சம்பந்தமாகவும் மருத்துவமனைலேயே தங்கி சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்துள்ளார்.

இவ்வாறு அவ்வப்போது பல்வேறு உடல் உபாதைகள் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று வழக்கம் போல சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்த கற்பகவல்லி இரவு அங்கேயே தங்கி உள்ளார்.



அப்போது, இரவு நேரத்தில் பணியாற்றும் காவலாளிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஒன்று சேர்ந்து உடனடியாக மருத்துவமனையை விட்டு வெளியே செல்லுமாறு தன்னை வற்புறுத்தியதாக புகார் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் வெளியே செல்ல மறுப்பு தெரிவித்த போது, அங்கு பணியில் இருந்த காவலாளிகள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் தன்னை அடித்து ஆடைகளை கிழித்து உடைமைகளை வெளியே தூக்கி எறிந்து பிரச்சனை செய்ததாக அப்பெண் தனது புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.



பின்னர், தான் மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் முறையிட்ட போது, அவர்களும் தன்னை உடனடியாக மருத்துவமனையை விட்டு வெளியே செல்லுமாறு நிர்ப்பந்தித்ததாக கூறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...