கோவை அடுக்குமாடி குடியிருப்பில் வெடிகுண்டு வைத்த வழக்கு-தேடப்படும் குற்றவாளியாக முஜிபூர் ரஹ்மான் அறிவிப்பு

கோவை கிளாசிக் கார்டன் அடுக்குமாடி குடியிருப்பில் வெடிகுண்டு வைத்த வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் முஜிபூர் ரகுமான் என்பவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த கோவை குற்றவியல் நீதிமன்றம் டிசம்பர் 23-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.


கோவை: கோவை அரசு மருத்துவமனை எதிரில் உள்ள கிளாசிக்கார்டன் குடியிருப்பின் கார் பார்கிங் பகுதியில் கடந்த 1997-ம்ம ஆண்டு மர்ம நபர்கள் சிலர் வெடிகுண்டை வைத்து விட்டு தப்பிச்சென்றனர்.

ஆனால் குடியிருப்பின் காவலாளி அந்த வெடி குண்டு பேக்கை பார்த்துவிட்டு உடனடியாக அதை வெளியே உள்ள குப்பை தொட்டியில் வைத்து விட்டு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 10 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் 10 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். பின்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் வழக்கு விசாரணையின் முடிவில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டு தற்போது இவ்வழக்கானது நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த வழக்கில் 11 ஆவது குற்றவாளியான ஷாஜகான் மற்றும் 12 ஆவது குற்றவாளியான முஜிபூர் ரகுமான் ஆகிய இருவரும் தலைமறைவாக இருந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2014-ஆம் ஆண்டு மேற்படி ஷாஜகானை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு தற்போது பிணையில் இருந்து வருகிறார்.

ஆனால் 12-வது குற்றவாளியான போத்தனூரை சேர்ந்த முஜிபூர் ரகுமான் என்பவர் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டிசம்பர் 23-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அவரது வீடு மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசாரால் நோட்டீஸ் ஒட்டப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...