கோவை அடுக்குமாடி குடியிருப்பில் வெடிகுண்டு வைத்த வழக்கு-தேடப்படும் குற்றவாளியாக முஜிபூர் ரஹ்மான் அறிவிப்பு

கோவை கிளாசிக் கார்டன் அடுக்குமாடி குடியிருப்பில் வெடிகுண்டு வைத்த வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் முஜிபூர் ரகுமான் என்பவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த கோவை குற்றவியல் நீதிமன்றம் டிசம்பர் 23-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.


கோவை: கோவை அரசு மருத்துவமனை எதிரில் உள்ள கிளாசிக்கார்டன் குடியிருப்பின் கார் பார்கிங் பகுதியில் கடந்த 1997-ம்ம ஆண்டு மர்ம நபர்கள் சிலர் வெடிகுண்டை வைத்து விட்டு தப்பிச்சென்றனர்.

ஆனால் குடியிருப்பின் காவலாளி அந்த வெடி குண்டு பேக்கை பார்த்துவிட்டு உடனடியாக அதை வெளியே உள்ள குப்பை தொட்டியில் வைத்து விட்டு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 10 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் 10 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். பின்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் வழக்கு விசாரணையின் முடிவில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டு தற்போது இவ்வழக்கானது நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த வழக்கில் 11 ஆவது குற்றவாளியான ஷாஜகான் மற்றும் 12 ஆவது குற்றவாளியான முஜிபூர் ரகுமான் ஆகிய இருவரும் தலைமறைவாக இருந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2014-ஆம் ஆண்டு மேற்படி ஷாஜகானை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு தற்போது பிணையில் இருந்து வருகிறார்.

ஆனால் 12-வது குற்றவாளியான போத்தனூரை சேர்ந்த முஜிபூர் ரகுமான் என்பவர் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டிசம்பர் 23-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அவரது வீடு மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசாரால் நோட்டீஸ் ஒட்டப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Newsletter

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...