கோவையில் மறைந்த திமுக பிரமுகர் பங்காருசாமியின் 10-ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி

துடியலூரில் நடைபெற்ற மறைந்த திமுக பிரமுகர் பங்காருசாமியின் 10-ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


கோவை: துடியலூர் பகுதி திமுக முன்னாள் அவைத்தலைவரும்,பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய அவைத்தலைவரும்,செயலாளருமாக இருந்த மறைந்த பங்காருசாமியின் 10-ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

துடியலூர் திமுக மன்றத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியம் மற்றும் பகுதி கழக செயலாளர் அருள்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, பங்காருசாமியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதனையடுத்து திமுக நிர்வாகிகள், மகளிர் அணியினர், இளைஞர் அணியினர் 100க்கும் மேற்பட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்ட கழக துணை செயலாளரும் பங்காருசாமியின் பேரனுமான தமிழ் நிதி செய்திருந்தார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட அவை தலைவர் பழனியப்பன், வட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 26 நிலவரம்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி, திருமூர்த்தி அணைகளில் மார்ச் 26ஆம்...

நீலகிரி மலை ரயிலில் பயணிக்க ஜெர்மன் ரயில் ஆர்வலர்கள் ரூ.3 லட்சம் வாடகை செலுத்தினர்

ஜெர்மனியைச் சேர்ந்த ரயில் ஆர்வலர்கள் குழு UNESCO அங்கீகாரம் பெற்ற நீலகிரி மலை ரயிலை ரூ.3 லட்சம் வாடகைக்கு எடுத்து குன்னூ...

தொழிலாளியை தாக்கி ஜாதி அவமதிப்பு: இருவருக்கு ஆயுள் தண்டனை

Coimbatore மலையாண்டிபட்டினம் பகுதியில் தேங்காய் உரிக்கும் தொழிலாளி பட்டீஸ்வரனை இரும்புக் கம்பியால் தாக்கி ஜாதி அவமதிப்பு...