திருப்பூரில் மாற்றுத்திறனாளி மகனின் வாழ்வாதாரத்துக்காக ஆவின் பால் பூத் அமைக்க உதவிட கோரி ஆட்சியரிடம் தந்தை மனு

காது கேளாத, வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி மகனின் வாழ்வாதாரத்துக்காக நீதிமன்ற வளாகத்தில் ஆவின் நிறுவனத்தின் பால் பூத் வைக்க உதவி செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் தந்தை மனு அளித்துள்ளார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் அங்குள்ள டீக்கடை ஒன்றில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்.



இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இதில் அவரது இரண்டாவது மகன் அபினேஷ் (19) நூறு சதவீதம் மாற்றுத் திறனாளி ஆவார். இவரின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு நீதி மன்ற வளாகத்தில் ஆவின் பாலகம் அமைத்துக் கொள்ள உதவிடக் கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.



அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனது இரண்டாவது மகன் அபினேஷ் (19) நூறு சதவீதம் மாற்றுத் திறனாளி. அவருக்கு காது கேட்காது. உணவு குழாய் சிறிதாக இருப்பதால் திரவ உணவு மட்டுமே அருந்தி வாழ்ந்து வருகிறார்.

மாற்றுத்திறனாளியான எனது மகனுக்கு தினமும் 250 முதல் 300 செலவாகிறது. எனது மகனுக்கு வாழ்வாதாரம் வேண்டி திருப்பூர் நிதிமன்ற வளாகத்தில் அரசின் உதவியுடன் ஆவின் பாலகத்தை தாங்கள் அமைத்து தர உதவிட வேண்டும்.



மேலும் ஒரு விபத்தில் எனக்கும் கால் முறிந்து விட்டது. எனவே எங்களது மகனின் வாழ்வாதாரத்தை காக்க ஆவின் பாலகம் அமைத்து தர உதவ வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...