வடவள்ளி அருகே பட்டப்பகலில் பெண்ணை மிரட்டி 25 சவரன் நகை, ரூ.7 லட்சம் பணம் மற்றும் காரை கொள்ளை - மர்ம நபர் கைவரிசை..!

கோவை வடவள்ளி அருகே பூக்கடை உரிமையாளர் பெரியசாமியின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் இருவர், தனியாக இருந்த அவரது மனைவியை மிரட்டி 25 சவரன் நகை, ரூ.7லட்சம் மற்றும் ஆல்டோ கார் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் வடவள்ளி மாதவன் நகர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவர், பூக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி.

இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல 10 மணி அளவில் பெரியசாமி வேலைக்கு சென்றுள்ளார். அப்போது மகேஸ்வரி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அப்போது திடீரென வீட்டிற்கு புகுந்த இரண்டு இளைஞர்கள் மகேஸ்வரியின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதையடுத்து வீட்டில் இருந்த பீரோவில் வைத்திருந்த 25 சவரன் நகை, ரூ.7லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

பள்ளி படித்து வரும் மகனை கொலை செய்ய வந்ததாகவும் ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்திருப்பதால் எங்களுக்கு கொல்ல மனமில்லை என்று கூறிவிட்டு, வீட்டின் வெளியே இருந்த காரைஎடுத்து கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பெரியசாமி அளித்த புகாரின் பேரில், சம்பவஇடத்திற்கு வந்த வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டப்பகலில் வீடு புகுந்து நகை, பணம், மற்றும் கார் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் இருவர் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...