துடியலூரில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அரசு பள்ளியில் இலவச கண் மருத்துவ முகாம்

துடியலூர் பகுதி தி.மு.க சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வெள்ளக்கிணரு அரசு பள்ளியில் நடைபெற்ற இலவச கண் மருத்துவ முகாமில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


கோவை: திமுக இளைஞர் அணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு துடியலூர் பகுதி திமுக சார்பில், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மேற்கு ரோட்டரி கிளப், அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து வெள்ளகிணறு வி.சி.வி.அரசு மேல்நிலை பள்ளியில் பகுதியில் இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.

மருத்துவ முகாமைதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தொடங்கி வைத்தார். முகாமில் கண்ணில் புரை உண்டாகுதல், மாறுகண்,நீர் அழுத்தம், மாலை கண் நோய், சீழ் மற்றும் நீர் வடிதல், தூர பார்வை, கிட்ட பார்வை, ஆகியவற்றிற்கு மருத்துவர்களால் இலவச பரிசோதனை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை தேவைப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். முகாமில் சுற்றுப் பகுதிகளில் இருந்து 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட அவை தலைவர் பழனியப்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியம், வட்ட செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் கற்பகம் ராஜசேகர், புஷ்ப மணி அருள்குமார், சுமதி,சித்ரா தங்கவேலு, சாந்தாமணி பச்சைமுத்து,உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...