மின் கட்டண உயர்வை அரசு திரும்ப பெறக்கோரி கோவையில் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு உண்ணாவிரதம்

மின் கட்டண உயர்வால் மூலப்பொருட்கள், உதிரிபாகங்கள், வெட் கிரைண்டர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் என கோவையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: மின் கட்டண உயர்வை கண்டித்து சிறு, குறு தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான போசியா சார்பில் கோவை சிவானந்தா காலனி மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள டாடாபாத் பகுதியில் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் 20 தொழில் அமைப்புகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் பங்கேற்றனர். உண்ணாவிரத போராட்டம் காரணமாக சிறு, குறு தொழில் கூடங்கள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன.



சிறு, குறு தொழில் கூடங்கள் பயன்படுத்தும் தாழ்வழுத்த மின்சாரத்திற்கு பீக்ஹவர் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், சிறு, குறு தொழில் கூடங்களுக்கு நிலைகட்டணம் உயர்த்தப்பட்டதை ரத்து செய்யவேண்டும் என்ற இரு முக்கியகோரிக்கைகளைமுன்வைத்து வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரத போராட்டமானது நடத்தப்பட்டது.

அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாகவே இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருவதாகவும், இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் 30 கோடி ரூபாய் மதிப்பில் உற்பத்தி இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் தொழில் முனைவோர் தெரிவித்துள்ளனர்.



தமிழக அரசு தொழில் முனைவோரின் கோரிக்கையை ஏற்று இந்த கட்டண உயர்வுகளை திரும்ப பெற வேண்டும் என தொழில் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர். மேலும் மின்கட்டண உயர்வால் உற்பத்தியாகும் பொருட்களின் விலை 35% அதிகரிக்கும் எனவும் இந்த பாதிப்பு என்பது அனைவருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறியுள்ளனர்.

தொழில்துறையினருக்கு வேலைகளுக்கான ஆர்டர்கள் குறைந்துவதுடன், அடிப்படை தேவையாக இருக்கும்அனைத்து பொருட்களின் விலையும் உயரும் என்பதால் தமிழகத்தில் வெளி மாநில பொருட்கள், மற்றும் வெளிநாட்டு பொருட்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.



போலியான பொருட்கள் உற்பத்தி செய்யபட்டு சந்தைக்கு வர வாய்ப்புள்ளதாகவும் மின்கட்டண உயர்வால் மின்சாரம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைவாகும் என்றும் கூறியுள்ளனர். தமிழக மின்சார வாரியம் மின்கட்டண வருவாய் தொடர்பான வெள்ளையறிக்கை வெளியிட வேண்டுமெனவும் தொழில் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த போராட்டத்தில் பாஜக-வினர் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டுஆதரவு தெரிவித்தனர்.



Newsletter

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...

ஆதவ் அர்ஜுனாவை நீக்க வேண்டும்: கோவையில் கிருஷ்ணசாமி

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் குடும்பத்தினர் மீதா...

தங்க விலை உயர்வு: வரிச்சட்ட மாற்றம் கோரி கோவை நகை உற்பத்தியாளர்கள்

தங்க விலை உயர்வால் மூலதன நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த கோயம்புத்தூர் நகை உற்பத்தியாளர் சங்கம், வரிச்சட்ட மாற்றங்கள்...

பேரூர் டி.எஸ்.பி நடப்பயண ரோந்து; பொதுமக்களிடம் குறைகள் கேட்பு

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பேரூர் டி.எஸ்.பி கால்நடை ரோந்து மேற்கொண்டு பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்...

கூடலூரில் அரசு பள்ளிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ சுனில் ஆனந்த்

கூடலூர் நகராட்சிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட மேட்டுப்பாளையம் எம்எல்ஏ சுனில் ஆனந்த், பழுதடைந்த குடிநீர் தொட...